Thursday, April 29, 2010

தனிமையின் வலிகள்


நாட்கள் போகின்றது தன்னாலே
ஆனால் நிமிடங்கள் ஒவ்வொன்றும் கசக்கின்றது தனிமையின் வலிகளால்
என்னுடன் கூடவே பிறக்காட்டிலும் இன்றுவரை கூடவே வருகிற தனிமை

நிலாவின் அஸ்த்தமனதுக்குள்
நினைவேறாத கனவுகளுடன்
வார்த்தையில் அடங்காத வலிகளும்
தாங்க முடியாத வேதனைகளும்

சிகரங்களை தொடும் நேரம்
சிதறல்கள் வரவழைத்தது
நினைவலைகள் அழைக்கின்ற நேரம்
வலிகளும் சிரிக்கின்றன!!

என் மனசுக்குள் வந்து பல காலங்கள் ஆனாலும்
அணையாமல் சுடர் விட்டு எரிந்து கொண்டிருப்பது
பசுமைகளை பாலைவனம் ஆக்கி
பல கண்ணீர் ஆற்றுக்களை இலகுவில் உருவாக்கியது

எனக்கு என்று சொல்ல யாரும் இல்லாதபோது
சொல்லாமலே கூடவே இருப்பது
நொடி தவறாமல் பயணிக்கும் வாழ்வில்
தனிமையும் என்னை பலிக்கடா ஆக்குகிறது

வலிகள் உள்ளது தானே வாழ்க்கை!!!