
உலகம் உருண்டை என்பது
எல்லோரும் அறிந்த உண்மை
இந்த உலகில் நீ மட்டும் அழகி என்பது
நான் மட்டும் அறிந்த உண்மை
உனக்காக பல வேதனைகளை சுமந்து
உன் சந்தோசத்துக்காக என்
பல கவலைகளை மறைத்தேன்
என் வலி கொண்ட இதயத்தில்
இனிமையான சுவாசக் காற்று நீ
என் உயிர் நீ தான் என்று
நீ அறியாமல் பிரிந்து சென்றாய்
உன்னோடு வாழ்ந்த காலம், கடந்த காலம்
ஆனாலும் உந்தன் நினைவுகளால்
வாடித் தவிக்கிறேன்
அன்று வானில் பல நட்சத்திரம் தோன்றி மறைந்தாலும்
என் வாழ்வில் ஒரே ஒரு சூரியனாக
நீ மட்டும் பிரகாசித்தாய்
என் நிம்மதியான வாழ்வை மறித்து
வழியை திசை மாற்றினாய்
நீ விலகிய நாள் தொடக்கம் இன்றுவரை
வாழ்வை வெறுத்து, நிம்மதியை தொலைத்து
அலைந்து கொண்டிருக்கிறேன்......
No comments:
Post a Comment