
நண்பா நீ காதலில் கால் பதித்து
கண்ணீரை சொந்தமாக்கிவிடாதே
உன் பசுமைகளை தீக்கிரையாக்கி
இன்பங்களை தொலைத்துவிடாதே
மாயங்களில் மயங்கி
இரவுகளில் தூக்கமின்றி
தனிமையில் கண்ணீர் சிந்தி
கணப் பொழுதில் உன்னை கலங்கப்படுத்தி
உன் எதிர்காலத்தை வீணடித்துவிடாதே
உன்னை அரவணைத்த பெற்றோருடன்
எல்லை கடந்து முரண்பட்டு
அன்பு காட்டிய சகோதரைத்தை
பிரிந்து சென்று
பல துன்பங்களை அனுபவித்துவிடாதே
காதலியை கனவு கண்டு
உன் அழகிய வாழ்க்கையை தொலைக்காதே
பிரிவின் வேதனை தாங்க முடியாமல்
மதுவுக்கு அடிமை ஆகிவிடாதே
உன் இனிய உறவுகளால் வெறுக்கப்பட்டு
சமூகத்தால் விரட்டப்பட்டு
நினைவுகளில் இருந்து விடுபடாமல்
உன் உயிரை இழந்துவிடாதே. . . . . .
No comments:
Post a Comment