
நான் இது வரை உணரவில்லை
உன் உண்மை காதல் எதுவென்று
உன்னோடு பழகிய ஒவ்வொரு நொடியிலும்
உணர்த்தினாய் உன் உயிர் மேலான
என் காதலை!!!
என் நினைவுகளை குறைத்து
உன்னை, உன் நினைவுகளையே ரசித்தேன்
நீ தொலைபேசியில் பேசிய வேளையில்
தொலைந்து போனது எனது ஜீவன்.....
உன் மௌனத்தால்
என் உள்ளத்தையே ஊமையாக்கினாய்
என் மனதை புரிந்து கொண்ட உனக்கு
என் இதயம் எப்பொழுதும் துடித்துக்கொண்டிருப்பது உனக்காக தான்
இதை மட்டும் நீ ஏன் இப்போழுது புரிந்து கொள்ள மறுக்கிறாய்
உன்னால் நான் படும் துன்பங்கள் கொஞ்சமல்ல
என்றாலும் மனம் வெறுக்கவில்லை
உன்னால், நான் உயிர் இருந்தும்
உணர்வற்று அலைகிறேன்
என் அன்பே, உயிர் கொடுப்பாயா
இல்லை உயிரை பிரிப்பாயா ? ? ? ?
No comments:
Post a Comment