
தினம் நான் காணும் கனவுகள்
அத்தனையும் உன்னை நினைத்து
ஒரு துளி கூட எண்ணவில்லை
என் கனவுகள்
வெகு விரைவில் நீ அறிவாய் என்று
இருண்ட என் உலகத்தில்
ஒளி வீசிய அதிசயமாய்
நம் இருவரினது
முதல் சந்திப்பு
மனதில் பல கற்பனைகளோடு
கையில் ஒரு ரோஜாவோடு
காத்திருந்த எனக்கு,
கண் எதிரே தோன்றினாய்
அழகிய தேவதையாக ....
உன்னை கண்டு
சிறகடித்து பறந்த என் மனதை
நீ பேசிய அந்த ஒரு கணத்திலே
சிதறடித்து சென்றாய்
முதல் சந்திப்பிலே
முடிவுற்ற நம் உறவு
மீண்டும் கனவானது காதல் ……
No comments:
Post a Comment