Monday, August 22, 2011

நான் அறிந்த உண்மை


என்ன வாழ்க்கையோ !
பயணங்கள் தான்
ஆரம்பித்துவிட்டனவே..
மனது மட்டுமே அறிந்த
உண்மை , பல
வேதனைக்கும் நடுவில்
வெளியில் போடுவது
புன்னகை வேஷம் என்று.

மானிட வாழ்க்கையில்
எல்லாம் கிடைத்தோர்
யார் யாரோ?
அதனால் நிம்மதி
இழந்தவர் யார் யாரோ?

புரிந்த இந்த
வாழ்க்கை பயணத்தில்..
சந்தித்த பல சொந்தங்களில்
பெற்றுக் கொண்டேன்
அதில் ஒரு உறவை.
அறிந்து கொண்டேன்
பாசத்தின் ஆழத்தை.

மனசாட்சி அறிந்தாலும்
மற்றவர்களுக்கு புரியவில்லை
வெளியல் நான் போடும்
வேஷத்தில், என்னை
நானே ஏமாற்றுகிறேன் என்று ......

No comments:

Post a Comment