
பதின்மூன்று ஆண்டுகளாக பள்ளியிலே
மாணவன் என்ற சமூகத்தில்
பல வருட படிப்புகளுக்கு
சில மணிநேர சோதனைகள்
நாட்கள் செல்லச் செல்ல
அறிவுகள் வளர்கின்றன
பல நாடகங்கள் அரங்கேற்றி
காதல் தோல்விகளை சந்தித்தோம்
மாணவ தலைவன் என்ற தரத்துக்கு உயர்த்தப்பட்டு
பல மன்றங்கள் ஆரம்பித்தோம்
விஞ்ஞான மன்றம் நிறுவி
நவீன உலகில் நன்மைகள் பெற்றோம்
கலை மன்றம் தொடங்கி
கலைஞர்களை அடையளாம் கண்டோம்
பட்டங்கள் பெறுவதற்கு
சில குறும்புகள் செய்து சிகரம் தொட்டோம்
பாடங்கள் குதிரை விட்டு
உதைபந்தாட்டம் விளையாடி
உப அதிபரிடம் உதை வாங்கியது
இன்றும் சுகமாக வலிக்கிறது
அன்று பல மாணவர்களுடன் பழகி
சில நண்பர்களாக சேர்ந்தோம்
இன்று பிரிந்து வெகு தூரம் சென்றாலும்
சிநேகிதர்களாக இருக்கிறோம்
பல ஆசிரியர்களால் தண்டிக்கப்பட்டு
சில ஆசிரியர்களிடம் பாராட்டு பெற்றோம்
அன்றைய மகிழ்ச்சிகள் இனி எங்களுக்கு
திரும்பிக் கிடைக்கப்போவது இல்லை!
சோதனைகள் சந்தித்து வேதனைகள் தாங்கினோம்
இறுதிப் பரீட்சையின் இறுதி முடிவுடன்
விடை பெற்றோம்!!!
No comments:
Post a Comment