Thursday, May 20, 2010

தந்தை, தாய்......


பத்து மாதங்களாக பாசத்துடன் சுமந்தாய்
உன் குருதியை பாலாக ஊட்டினாய்
உண்ணுவதற்கு உணவு கொடுத்த நீ
நிம்மதி உறக்கமும் தந்தாய்

பல அறிவுரை கற்று கொடுத்து
சமூகத்தில் நல்ல மனிதன் ஆக்கினாய்
பல வெற்றிகளை பாராட்டிய நீ
தோல்விகளுக்கு தோள் கொடுத்தாய்

தப்பு பண்ணியத்துக்கு தண்டித்தாய்
தலை சாய்க்க தலையணை தந்தாய்
என் ஆற்றல்கள் வளர்க்க உதவி,
சமூகம் என்னை போற்றுவதை கண்டு மகிழ்ந்தாய்

நான் கேட்பதை கொடுக்கும் கடவுள் நீ
நீ காட்டிய பாதைகள் பல கடந்து
சிகரங்கள் தொட்டேன்
உங்களது நல்லாசியுடன்
வாழ்க்கை பயணதில் வழி தவறாமல்
இனிதே பயணித்து கொண்டிருக்கிறேன்.....

No comments:

Post a Comment