
நீ சுவாசிக்கும் பொழுதுகளில்
நான் உயிர் வாழ்கிறேன்
நீ போகும் இடமெங்கும்
நான் காத்திருந்து பேசினேன்
உன்னை சந்திக்கின்ற அதிசயமான
பொழுதுகளில் எல்லாம் உந்தன் இதழ் பேசியது
உனக்காக உனக்கு பிடித்த பலவற்றை
தயங்காமல் செய்தேன்
பிரிந்து செல் என்று சொல்ல மனதின்றி
வலிகள் பிடிக்கும் என்றாய்
வசந்தங்கள் நிறைந்த வாழ்வில் இருக்கும் போது
என் அருகில் இருந்தாய்
பல சந்தோசங்களை என்னுடன் கழித்து
பிரிவு என்னும் வலியை விட்டு சென்றாய்
உன் எதிர்காலத்தை கனவு கண்டு
என் நிகழ்காலத்தை வீணடித்தாய்
இரவுகளில் உறக்கம் இன்றி தவிக்கிறேன்
உன்னுடன் பேச துடிக்கிறேன்
விடை பெற்றது நீ என்றாலும்
வலி பெறுவது நான் தானே!!!
No comments:
Post a Comment