Thursday, May 13, 2010

என் இதயத்தில் உன் நினைவலைகள்


பலரிடம் இருந்து காப்பாற்றி என் இதயத்தை
ஒரு நொடியில் பறித்து சென்றாய் அன்று
நந்தவனத்தில் இன்று நான்
நடை பிணமாய் அலைகிறேன் உன்னை காண்பதற்க்காக

வளைந்தோடும் நதிக்கரைகளில்
அழகிய காற்பாதம் பதித்தோம் நாம்
பூஞ்சோலை பூக்கள் வாடுகின்றன
உன் கை படாமல்

உன்னோடு பேசும் போது
என்னையே மறந்தேன்
உன்னோடு வாழ நினைக்கும் போது
என் வாழ்க்கையை தொலைத்தேன்

உன்னை நினைக்க வைத்து
என் மனசிறையில் சிற்பம் செதுக்கினேன்
யாருமற்ற வெளிகளில் உனக்கு பிடித்த ஓர் பளிங்கு மாளிகை
என்றும் வரவை எதிர்பாத்து........

என் இதய புத்தகத்தை படித்து முடித்த
நீ மெளனமாக சென்றுவிட்டாய்
இப்போது உன் நினைவுகளை சுமந்தபடி
ஒரு முறையாவது சந்திக்க துடிக்கிறேன்

கண்ணீரில் மூழ்கிய என் இதயம்
உன் நினைவுக் கடலில் தத்தளிக்கிறேன்
காப்பாற்ற வராட்டிலும் கடைசியில்
கல்லறைக்கு ஆவது வந்துவிடு!!!

1 comment:

  1. எல்லோருடைய இதயத்திலும் ஒரு நினைவலைகள் இருக்கும்
    உங்கள் இதயத்தில் உள்ளது நல்லாயுள்ளது .......................................

    ReplyDelete