
என்னுயிர் வான்மதியே. . .
உன் இளமை தீண்டியதால்
நான் சிக்கித் தவிக்கின்றேன்...
என்னைக் கேளாமலே
என் இதயச் சுவர் எங்கும்
உன் நினைவுகளை
நிரப்பிவிட்டாய்
என் செல்லமே
அன்று
தென்றலாய் வந்தாய்
என்மனதை கொள்ளையடிக்க
தேனாக சுவைத்தாய்
இதயத்தில் சிறைவைக்க
இன்று
தொலை பேசி அடித்தாலும்
நீ தான்
ஈமையில் பார்த்தாலும்
உன் வரிகள்- என்று
என் மனம் அலைமோதுகின்றது
என் உயிர் செல்லமே ,
எண்ணங்களை கவிதையாக்கி
உன்னிடத்தில் சமர்பிக்கின்றேன்
நீ என்மீது கொண்ட காதல்
உண்மையானால்
என்னிடம் வருவாயா ????
No comments:
Post a Comment