
உன் காதல் தந்த சோதனையால்
என் நினைவுகள் அனைத்தும்
உன்னைப் பற்றியே. . . .
உள்ளுக்குள் அழுகிறேன்
நீ படரச் செய்த பாசத்தால். . . .
வெளியிலே சிரிக்கின்றேன்
என்னை வெறுக்கும் உறவுகளை நினைத்து
என் உணர்வுகளை புரிந்த நண்பர்களும்
என்னருகே இல்லை
என் உயிரோடு கலந்த நீயும்
என்னிடத்தில் இல்லை
உன்னுடன் பழகிய நாட்கள்
உன் நினைவுகளோடு
வாழ்ந்த காலம்
இவை அனைத்தையும்
கனவென மறக்க நினைக்கிறேன்
மறுகனமே வேண்டாம் என்கிறது
என் உண்மை காதல்......
No comments:
Post a Comment