
உன்னை மறக்க நினைக்கின்றேன்
மனதில் அமைதியில்லை. . . .
உன்னை வெறுக்க முயல்கின்றேன்
வாழ்வில் நிம்மதியில்லை. . . .
உன் நினைவுகளை அழிக்கத் துடிக்கிறேன்
இரவுகளில் தூக்கமில்லை. . . .
வெளியிலே சிரித்து நடித்தாலும்
உள் காயங்கள் ஆறவில்லை. . . .
விடியல்களில் ஏக்கங்களுடன் காத்திருந்து
ஏமாற்றத்துடன் விடைபெறுகின்றன. . . .
அன்று சந்தோஷமாய் இருந்த சில நொடியை விட
இன்று சுமையாய் இருக்கும் உன் நினைவுகள்
என்றுமே சுகமானவை . . . .
No comments:
Post a Comment