
நித்தமும் உன் நினைவுகளையே
சுமக்கின்ற என் நெஞ்சு,
உன் வரவினை எதிர்பார்த்து
எத்தனை கனவுகள்...
உன் மனதை புரிந்ததனால்
உன் குறும்புகளை ரசிக்கும்
ரசிகனானேன்
உன் நினைவுகளோடு இருப்பதனால்
உன்னை காக்கும்
காவலனானேன்
கனவுகளில் நீவந்து
ஆசைகளை தூண்டிவிட்டாய்
கற்பனைகளிலே
சிற கடித்து பறக்கிறேன்
மலரே
உன் மனதில் இருப்பதை
மௌனத்தால் மறைத்தும்
என் அசைவுகள் அனைத்தும்
உன்னை நாடியே...
நான் உயிரோடு வாழ்வது
உனக்காகவே...
No comments:
Post a Comment