Tuesday, November 1, 2011

என் விருப்பம் . . .


உன்னைக் காணும் வரை
காதல் ஆசை இல்லை
என் மனதில்
உன்னை சந்தித்த பின்
என் இதயமோ என்னிடம் இல்லை ....

அன்பால் உள்ளத்தை இணைத்து
பாசத்தால் உணர்வுகளை பகிர்ந்து
கனவுகளில் ஆசை வளர்த்து
எண்ணங்களை கவிதையாக்கி
காதல் மழையாய் பொழிந்து
விலகிச் சென்றாய்
என்னிடமிருந்து ....

மனதை பறிகொடுத்த
முதல் சந்திப்பில்
நீ இசைத்த இதயராகம்
இன்றும் என் மனவாசலில்
ஒலித்துக் கொண்டிருகிறது....

என் உயிரே
உன்னிடத்தில் நம் காதல்
உதிராது இருக்கும் வரை
வாழப் போகும் சில நாட்களுக்காக
ஏழு ஜென்மம் வேண்டுமானாலும் காத்திருபேன்
இல்லையேல்
நீ பேசிய காதல் மொழியோடு
காற்றுடன் சங்கமிப்பேன் . . . .

No comments:

Post a Comment