
யாருமற்ற இந்த நிலாவொளியில்
உன் நினைவுகளையே
அள்ளித்தரும் தருணம்
நான் தனிமையில் தவிக்க
துணைக்கு ஆறுதல் சொல்ல
தொலைபேசியில் கசியும்
உன் குரல் ....
இந்த இரவினில்
ஏக்கங்கள் அதிகரித்தாலும்
பனிக் குளிரில்
உடல் நடுங்கினாலும்
எனக்கு தனிமை புலப்படவில்லை
நீ நெஞ்சிலே வாழ்வதனால்....
தோழியாய் நீ
எங்கும் கூடவரும் போது
எனக்கு தெரியவில்லை
உன் நேசம்
காதலியாய் நீ
தொலைவினில் காத்திருக்க
என் மனசே தாங்கவில்லை
உன் தவிப்பை கண்டு....
No comments:
Post a Comment