
என்னவளே !!!
இந்த அப்பாவி மனதில்
அமைதியாய் குடிகொண்டாய்..
கற்பாறையாய் இருந்த என் இதயத்தில்
காதல் ரோஜாவாய் மலர்ந்தாய்..
என் இரவுகளை களவாடி
உறக்கத்திலும் தொந்தரவு செய்தாய்..
மௌன மொழி போசி
உன் வெறுப்பை வெளிக்காட்டினாய்..
என்றும் உனக்காக நான் மட்டும் தான் என
தினமும் உன் நினைவாலே ஏங்க வைத்தாய்..
என் உயிரில் கலந்தவளே
ஆயுள் முழுவது உனக்காக வாழ்ந்தாலும்
அதில் ஒருநாள் உன்னோடு வாழ்ந்தால்
போதும் கண்ணே..
No comments:
Post a Comment