Wednesday, March 16, 2011

எனக்குள்ளே உயிராய் வாழும் உன் காவியமே . . . . .


என் இதய பூந்தோட்டத்தில் மலர்ந்த ரோஜாவே
கடல் கரையில் உன்னுடன்
கெஞ்சி அழுத இரவுகளும்
பேசிய பழகிய நாட்களும்
இன்று என் மனசுக்குள் கண்ணீர் காவியமாய்

என் மீது அளவற்ற அன்பு காட்டி
வலிகளுக்கு கண் கலங்கினாய்
உனக்கு நிகர் யாரும் இல்லை எனக்கு,
என்று நீ அறிந்து அநாதையாய் விட்டு விலகினாய்

இன்று என் மனசுக்குள் நான் படும் வேதனைக்கு
உன்னை தவிர யாருக்கும் தெரிவதில்லை
என் விரல் பிடித்து நீ துடைத்த மணல்களும்
நீ எழுதிய கவிதைகளும்
என் கண் முன்னால்

நீ கடல் தாண்டி இருந்தாலும்
என் மனதில் தினமும் கலையாத கனவுகளில்
என் அருகில் இருந்த முழுநிலா தொலை தூரத்தில் சென்றாலும்
தனிமையில் உன் நினைவுகளுடன் உன் கால் தடத்தில்
தினமும் உன் வரவை எதிர் பார்த்து காத்திருகிறேன்

No comments:

Post a Comment