Monday, March 28, 2011

மறக்க முடியாத உன் பிரிவு. . . . . .


கடல் கரைகளில் உன் கைகோர்த்து நடந்த
பொன்மாலை பொழுதுகள்
உன் மடி சாய்ந்து உறங்க ஏங்கிய
அந்த குளிர் இரவு
இருவரும் ஒரு குடையில் சென்ற
மழைக் காலங்கள்
உன்னுடன் மட்டுமே சேர்ந்து சென்ற
தொலை தூர பயணங்கள்
நீ தொலைபேசியில் பேசிய
அந்த சில நிமிடங்கள்
இரவுகளில் உன்னையே நினைத்து
தூங்காது விழித்திருந்த என் விழிகள்
நிலவுகளில் நீ எனக்காக
எழுதிய கவிதைகள்
உனக்காக காயப்படுத்திய
என் உறவுகள்
உனக்காக என்றும் வேண்டி
நித்தம் தொழுத என் உள்ளம்
உனக்குள் தொலைக்கப்பட்ட
என் உயிர்
இவை எல்லாத்தையும்
ரணப்படுத்திணாய் அன்பே
பிரிவு என்னும் ஒரு சொல்லில். . . .


இன்று இதயம் என்னும் கல்லறையில் வசந்தமான உன் நினைவுகள்
மட்டுமே என் வலிகளுக்கு ஆறுதலாய்......

No comments:

Post a Comment