
என்னை காக்க வைத்த நீ
தனிமையில் அங்கு
உனக்காக காத்திருந்த நான்
தவிர்ப்புக்களில் இங்கு
உன்னையே எண்ணிய எனக்கு
சுற்றி நிகழும் நிஜங்கள் கூட நிழலாய்
உதடு பிரியாத புன்னகையிலும்
ஆடம்பரமில்லா வெட்கத்திலும்
உன் அன்புக்கு அடிமையாகி
எனது இதய நதியில் ஓடமாய்
ஓடிக் கொண்டே இருக்கும் உன் நினைவுகளை
கவிதைகளாக உனக்கு எழுதினேன்
உன் இதயத்தில் எனக்கோர் இடம் கேட்டு
அன்பே, காதலை நேசிக்கும் உன்னிடம்
பகிர்ந்துள்ளேன் என் உணர்வுகளை
பதிலை தந்திடு . . . . . .
No comments:
Post a Comment