
எங்கிருந்தோ வந்தேன்...
நட்பு என்னும் பாலத்தால்
நண்பன் என்னும் உன் உறவை பெற்றேன்
ஆழமாய் துளிர்விட்டு
அழகாய் பூத்தது நம் நட்பு
அந்த நட்பு என்னும் நந்தவனத்தில்
நெடுங்காலம் இணைத்திருந்தோம்
வாழ்க்கை என்னும் பயணத்தில்
துன்பமாய் உன்னை பிரிந்து
மொழி தெரியாத ஊரில் வாழ்ந்தாலும்
என் இதயம் என்னும் இயந்திரம் இயங்கும் வரை
உன் நட்பு என்னும் காற்றை சுவாசித்துக் கொண்டிருப்பேன்
என்றும் உன் தோழனாய் சேது . . . . .
No comments:
Post a Comment