Wednesday, March 16, 2011

என்றும் உன் நினைவில் . . . . . .


அன்பே உனக்காக வாழ நினைத்த போதெல்லாம்
உதாசீனப்படுத்தி பைத்தியம் என்றாய்
இன்று உன்னை பிரிந்து உன் நினைவோடு
வாழும் போது பாவம் என்கிறாய்

உதட்டில் நீ மறைத்தாலும்
உன் மனதில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நீ என்னை வெறுத்தாலும்
என் இதயம் இயக்கும் வரை
உன்னை காதலித்துக் கொண்டிருப்பேன்

உன்னை நேசித்த இதயத்தை
இலகுவாக பிரித்த உனக்கு
இதயத்தின் வலியை மட்டும் எப்படி உணர்வாய்

உன்னுள் என் நினைவுகளாவது
நிம்மதியாய் உறங்கட்டும் என்று
தூங்காத இரவுகளோடு
துணைக்கு நீ இன்றி
ஏங்கித்தவிக்கிறேன் . . . .

No comments:

Post a Comment