Sunday, August 21, 2011

மறக்க முடியுமா


பெண்ணே
இதயங்களுக்குள் அன்பு பரிமாறி
பாசத்தால் பின்னிப் பிணைந்து
வாழ்கையில் ஆசைகள் வளர்த்த
நம் காதல்
இன்று காணல் நீராய் போனதடி

அன்பே
நாம் காதலில் இனிமையாக
வாழ்ந்த காலம் சில காலம் ஆனாலும்
அவை எல்லாம் வெறும் கனவுகள் என்று
மறக்க முடியுமா

என்னவளே
நீ என்னை பிரிந்தாலும்
பூவை விட மென்மையான உன்னை
என் ஆயுள் காலத்தில்
மறக்க முடியுமா

இதயமானவளே
என் வாழ்வில் சோகம் நிறைந்தாலும்
நித்தமும் நினைவூட்டும்
உன் நினைவுகளை
மறக்க முடியுமா

என் உயிரானவளே
இவற்றை மறக்கும் என்னம்
என் ஜீவனுக்கு இல்லை
அப்படி மறந்தால்
என் ஜீவன் இவ்வுலகில் இல்லை

No comments:

Post a Comment