Monday, July 11, 2011

உன்னை ஒரு போதும் வெறுக்க மாட்டேன் . . . . . .


தெரியாத போது

ஆசைப்பட்டு அணைத்த என்னை

தெரிந்த போது

தெருவில் உதறி விட்டாய்

உறவாக நீ பேசிய வார்த்தைகளில்

உலகமே நீதான் என்று

மனம் மகிழ்ந்தேன் அன்று

என் உயிரே என்னை

உதறிய போது

உணர்வுகளை ஊமையாக்கி

மரணித்துக் கொண்டிருக்கிறேன் இன்று

நீ பேசிய வார்த்தைகளை

கவிதைகளாக சுவாசித்து

நீ எழுதிய கடிதத்தை

என் கல்வெட்டாக படித்துப் பார்க்கிறேன்

மனதிற்க்கு வலி தந்தாலும்

என் இனிய உறவாக இதயத்தில்

நினைத்துக் கொண்டிருக்கின்ற உன்னை

ஒரு போதும் வெறுக்க முயர்ச்சிக்க மாட்டேன்

No comments:

Post a Comment