Sunday, June 19, 2011

நேசிப்பேன்


சுவாசிக்கும் வரை காற்றை நேசிப்பேன்

தூங்கும் வரை நிலவை நேசிப்பேன்

கற்பனை உள்ளவரை கவிதையை நேசிப்பேன்

கரையைத் தொடும் வரை கடல் அலையை நேசிப்பேன்

விண்மீன் மறையும் வரை வானை நேசிப்பேன்

பூக்கள் வாடும் வரை நந்தவனத்தை நேசிப்பேன்

பாசம் உள்ளவரை உறவுகளை நேசிப்பேன்

நினைவுகள் உள்ளவரை நண்பர்களை நேசிப்பேன்

கல்லறை செல்லும் வரை காதலை நேசிப்பேன்

உயிர் உள்ளவரை நட்பை நேசிப்பேன்

No comments:

Post a Comment