
சுவாசிக்கும் வரை காற்றை நேசிப்பேன்
தூங்கும் வரை நிலவை நேசிப்பேன்
கற்பனை உள்ளவரை கவிதையை நேசிப்பேன்
கரையைத் தொடும் வரை கடல் அலையை நேசிப்பேன்
விண்மீன் மறையும் வரை வானை நேசிப்பேன்
பூக்கள் வாடும் வரை நந்தவனத்தை நேசிப்பேன்
பாசம் உள்ளவரை உறவுகளை நேசிப்பேன்
நினைவுகள் உள்ளவரை நண்பர்களை நேசிப்பேன்
கல்லறை செல்லும் வரை காதலை நேசிப்பேன்
உயிர் உள்ளவரை நட்பை நேசிப்பேன்
No comments:
Post a Comment