Sunday, June 19, 2011

நீ இல்லையே



சந்தித்த உள்ளத்தில்
என் இதயத்தை தொலைத்து விட்டு
மனதில் பல ஏக்கங்களோடு
என் கனவிலும் கலையாத
உன் திருமுகத்தை காண
தினம் தினம் தவிக்கிறேன்

பூக்கின்ற பூக்கள் எல்லாம்
வாடாமல் இருப்பதில்லை
வாடுகின்ற மலர்கள் எல்லாம்
உதிராமல் இருப்பதில்லை
என்னவளே உன்னால் என்
மன பூங்காவில் மலர்ந்த
காதல் பூ என்றுமே உதிராதடி

உனக்கான என் தேடல்
ஒரு காணல் நீரென்று தெரிந்தும்
உன்னையும், உன் நினைவுகளையும்
இன்னும் நேசிக்கின்றேன்

ஒன்று சேர்க்க
முடியாத நம் ஜீவன்களால்
நிம்மதி இல்லாத
என் வாழ்க்கை
தொடர்கின்ற சோகங்களை
சொல்லி அழ என்னருகே
நீ இல்லையே என்னவளே

No comments:

Post a Comment