Sunday, June 19, 2011

சுகமான நினைவுகள்


உன்னுடனான நினைவுகள் தான்
எவ்வளவு சுகமானது
உன் கை பிடித்து
கடற் கரையில் நடந்த நாட்களும்
உன் மடி சாய்ந்து தூங்கிய
ரயில் பயணங்களும்
பொன் மாலை பொழுதுகளில்
நீ, என் தோள் சரிந்து
பாடிய பாடல்களும்
நாம் மெய் மறந்து மணிக்கணக்கில்
பேசிக் கொண்ட நிலாக் காலங்களும்
இடி மின்னலுக்கு நீ என்னை இறுக
கட்டியனைத்த மழை நேரங்களும்
இரவுகளில் தூங்காமல்
இருவரும் இடை விடாது பரிமாறிய
குறுஞ் செய்திகளும்
நான் தாமதித்து வந்தால்
நீ என்னோடு புரியும்
செல்லச் சண்டைகள்
இவை அனைத்து
நம் பிரிவிலும்
சுகமான நினைவுகளாக
என்றுமே கலங்காமல் இருப்பவை

No comments:

Post a Comment