Sunday, June 19, 2011

சம்மதம் தருவாயா


அன்பே, உயிரோடு கலந்த
உன்னை மறக்க
என் மனதிற்க்கு தெரியவில்லை
குழப்பங்கள் என் மனதில் இருந்தாலும்
உனக்கு எந்த வலியையும் தரவில்லை
என் உள்ளத்தில் சோகம் நிறைந்தும்
உன் சந்தோஷத்தை கலைக்கவுமில்லை
இதை அத்தனையும் நீ உணர்ந்திருப்பாய்

உன் சம்மதம் ஒன்றுக்காக
நான் படும் வேதனைகளை
யாரிடம் சொல்ல
தனிமையில் வாடிய
என் மீது அளவற்ற பாசத்தை காட்டி
ஏன் விலகி சொல்லுகிறாய்

நிரந்தரமில்லாத உறவுகளுக்காய்
உண்மையான நம் காதலை
என் புறக்கணிக்கிறாய்
என் உயிரே
நான் மறு ஜென்மமும்
உன்னோடு வாழ்வதோ
இல்லை மறுகணமே
மரணிப்பதோ
உன் பதிளில் தானடி. . . . . .

No comments:

Post a Comment