
உன் பார்வையால்
என் இதய தேசத்தில் இடம் பிடித்தவளே
உன்னுடன் கழியும்
ஓவ்வொரு நொடியிலும்
உன்னோடு ஜோடி சேர்ந்து
வானில் பறக்கின்றேன்
கனவிழும் கற்பனை வளர்த்து
இரவுகளில் தூக்கத்தை தொலைத்து
நிலவுகளில் உன் படத்துடன் கதை பேசி
நினைவுகளை கவிதையாக்கி
நிமிடங்களில் என்னை மறக்கிறேன்
உன்னைப் பார்த்த முதல் நொடியில் இருந்து
இருக்கும் காலம் முழுவதும்
உனக்காக வாழ்கிறேன்
பிரியமே ,
புரியாத உன் இதயத்திற்கு
அழியாத நம் காதலை
அணையாமல் எரிக்கின்றாய்
நெருப்பாலும் அழிக்க முடியாத
உன் நினைவுகளோடு
அழகிய நந்தவனத்தில்
அநாதையான பறவையா நான்
இன்று தனிமையில் தவிக்கிறேன்
No comments:
Post a Comment