Sunday, June 19, 2011

தனிமையில் ஒரு தவிப்பு


உன் பார்வையால்
என் இதய தேசத்தில் இடம் பிடித்தவளே
உன்னுடன் கழியும்
ஓவ்வொரு நொடியிலும்
உன்னோடு ஜோடி சேர்ந்து
வானில் பறக்கின்றேன்

கனவிழும் கற்பனை வளர்த்து
இரவுகளில் தூக்கத்தை தொலைத்து
நிலவுகளில் உன் படத்துடன் கதை பேசி
நினைவுகளை கவிதையாக்கி
நிமிடங்களில் என்னை மறக்கிறேன்
உன்னைப் பார்த்த முதல் நொடியில் இருந்து
இருக்கும் காலம் முழுவதும்
உனக்காக வாழ்கிறேன்

பிரியமே ,
புரியாத உன் இதயத்திற்கு
அழியாத நம் காதலை
அணையாமல் எரிக்கின்றாய்
நெருப்பாலும் அழிக்க முடியாத
உன் நினைவுகளோடு
அழகிய நந்தவனத்தில்
அநாதையான பறவையா நான்
இன்று தனிமையில் தவிக்கிறேன்

No comments:

Post a Comment