
என்னவளே அன்று தேவதையாய் வந்து
என் இதயத்தை பறித்து சென்றாய்
இன்று தெருவோரம்
தனிமையில் துடிக்கும் போது
ஒன்றும் தெரியாத ராட்ஷசியாய்
ஒதுங்கி செல்கிறாய்
நீ என்முன் ராட்ஷசியாய் நடித்தாலும்
நிஜத்தில் என்மீது உண்மையான
அன்பு செலுயத்தியவள்
உன் உள் மனதை புரிந்துகொண்ட எனக்கு
என்றுமே என் உயிர்த்
தேவதை நீயடி
சின்ன சின்ன காரணங்கள் சொல்லி
என்னுடன் செல்லச் சண்டையிட்டு
தொலைதூரம் சென்று
எனக்காக காத்திருக்கும்
என் அன்புள்ள ராட்ஷசியை
உயிர் உள்ளவரை மறக்கமாட்டேன்
No comments:
Post a Comment