
எழுத படிக்கத் தெரியாத வயதினில்
தெருவோர வாழ்கையும்
சிந்திக்க தெரியாத வயதினில்
சந்தித்த சோதனைகளும்
கிழிந்த இலையில்
எச்சில் உணவும்
கரம் கொடுக்க யாருமின்றி
தள்ளாடும் கால்களும்
பெற்றவர்களை தெரியாமல்
சகோதர பாசம் அறியாமல்
பசி வயிற்றை கிள்ள
சிந்துகின்ற கண்ணீரும்
ஆயிரம் தடவை அழைத்தாலும்
அணைதுக் கொள்ள யாருமின்றி
தூங்கிய பொழுதுகளும்
சந்தோஷமே தெரியாமல்
காலங்கள் பல கடந்து
வலிகளும் தொடர்கின்ற வேளை
புரிந்து கொண்டேன் இன்று
நானும் ஒரு அநாதையென்று . . . . . .
No comments:
Post a Comment