
நீ எனக்கு சொந்தமில்லாதவள் என்று
என் மனம் அறிந்தும்
உனக்காகவே என் இதயம் துடிக்கிறது
அன்பே உன்னை மறக்க நினைத்தால்
மரணிக்க துணிகிறது என் மனம்
நீ என் கனவு தேவதையாக
காலம் முழுவது என் இதயத்தில் இருந்தாலும்
நான் தான் உன் காதலன்
என்று மீண்டும் கேட்க
எனக்கு நம்பிக்கையில்லை
நீ இதை புரிந்து கொண்டாலும்
திரும்பி வர உனக்கு தைரியம் இல்லை
அன்பே எந்த தவறும் செய்யாமல்
அணு அணுவாய் தண்டனை
அனுபவிக்கின்ற பாவியாய் நான்
தனிமையில் தவம் இருந்தும்
என் மனம் உன் நினைவுகளில் இருந்து
விடுபடவில்லை
அன்பே காலங்கள் பல கடந்து
நான் கல்லறை சென்றாலும்
என் உயிர் காதலி நீ தான்
No comments:
Post a Comment