Wednesday, March 16, 2011

என் நண்பா ......


எங்கிருந்தோ வந்தேன்...
நட்பு என்னும் பாலத்தால்
நண்பன் என்னும் உன் உறவை பெற்றேன்

ஆழமாய் துளிர்விட்டு
அழகாய் பூத்தது நம் நட்பு
அந்த நட்பு என்னும் நந்தவனத்தில்
நெடுங்காலம் இணைத்திருந்தோம்

வாழ்க்கை என்னும் பயணத்தில்
துன்பமாய் உன்னை பிரிந்து
மொழி தெரியாத ஊரில் வாழ்ந்தாலும்
என் இதயம் என்னும் இயந்திரம் இயங்கும் வரை
உன் நட்பு என்னும் காற்றை சுவாசித்துக் கொண்டிருப்பேன்



என்றும் உன் தோழனாய் சேது . . . . .

எனக்குள்ளே உயிராய் வாழும் உன் காவியமே . . . . .


என் இதய பூந்தோட்டத்தில் மலர்ந்த ரோஜாவே
கடல் கரையில் உன்னுடன்
கெஞ்சி அழுத இரவுகளும்
பேசிய பழகிய நாட்களும்
இன்று என் மனசுக்குள் கண்ணீர் காவியமாய்

என் மீது அளவற்ற அன்பு காட்டி
வலிகளுக்கு கண் கலங்கினாய்
உனக்கு நிகர் யாரும் இல்லை எனக்கு,
என்று நீ அறிந்து அநாதையாய் விட்டு விலகினாய்

இன்று என் மனசுக்குள் நான் படும் வேதனைக்கு
உன்னை தவிர யாருக்கும் தெரிவதில்லை
என் விரல் பிடித்து நீ துடைத்த மணல்களும்
நீ எழுதிய கவிதைகளும்
என் கண் முன்னால்

நீ கடல் தாண்டி இருந்தாலும்
என் மனதில் தினமும் கலையாத கனவுகளில்
என் அருகில் இருந்த முழுநிலா தொலை தூரத்தில் சென்றாலும்
தனிமையில் உன் நினைவுகளுடன் உன் கால் தடத்தில்
தினமும் உன் வரவை எதிர் பார்த்து காத்திருகிறேன்

Wednesday, September 1, 2010

உன்னை தொலைக்க ஆரம்பித்த தருணங்களிருந்து


அன்று உறவுகள் அற்ற எனக்கு
உன் அன்பால் ஒரு உலகம் அமைத்து
உன்னை உறவாக்கி கொடுத்தாய்,
உன்னை உயிராய் நினைத்த என்னை
உதறிச் சென்றாய் இன்று

உன் விருப்புக்கிணங்க
என் கனவுகளை தொலைத்து, ஆசைகளை புதைத்து,
உன்னுடன் மட்டுமே சென்ற
தொலை தூர பயணங்களும்,
கடற்கரைகளில் உன்னுடன் கைகோர்த்து
நடந்து வந்த பாதைகளையும்
திரும்பி பார்க்க மறுக்கின்றதென் மனம்

மனதால் ஊனம் உற்ற என்னை
உன் பிரிவால் ஊமை ஆக்கினாய்
வாழ்க்கை என்னும் இன்ப கடலில்
வழி காட்டியாய் வந்து
வானவில்லாய் மின்னிச் சென்றாய்

உன் மடி சாய்ந்து உறங்க ஏங்கிய எனக்கு
நிரந்தர தூக்கத்தை கொடுத்து விட்டாய்....
இன்று உன் பிரிவை தாங்க முடியாமல்
என் நினைவுகளில் இருந்து
உன் எல்லையற்ற அன்பை விலக்க
முயச்சிக்கிறேன்.....

Friday, July 16, 2010

மனம் வெறுக்கவில்லை. . . .


நான் இது வரை உணரவில்லை
உன் உண்மை காதல் எதுவென்று
உன்னோடு பழகிய ஒவ்வொரு நொடியிலும்
உணர்த்தினாய் உன் உயிர் மேலான
என் காதலை!!!

என் நினைவுகளை குறைத்து
உன்னை, உன் நினைவுகளையே ரசித்தேன்
நீ தொலைபேசியில் பேசிய வேளையில்
தொலைந்து போனது எனது ஜீவன்.....
உன் மௌனத்தால்
என் உள்ளத்தையே ஊமையாக்கினாய்

என் மனதை புரிந்து கொண்ட உனக்கு
என் இதயம் எப்பொழுதும் துடித்துக்கொண்டிருப்பது உனக்காக தான்
இதை மட்டும் நீ ஏன் இப்போழுது புரிந்து கொள்ள மறுக்கிறாய்
உன்னால் நான் படும் துன்பங்கள் கொஞ்சமல்ல
என்றாலும் மனம் வெறுக்கவில்லை

உன்னால், நான் உயிர் இருந்தும்
உணர்வற்று அலைகிறேன்
என் அன்பே, உயிர் கொடுப்பாயா
இல்லை உயிரை பிரிப்பாயா ? ? ? ?

என் உயிர் நண்பனே காதலித்து விடாதே . . . . . .


நண்பா நீ காதலில் கால் பதித்து
கண்ணீரை சொந்தமாக்கிவிடாதே
உன் பசுமைகளை தீக்கிரையாக்கி
இன்பங்களை தொலைத்துவிடாதே

மாயங்களில் மயங்கி
இரவுகளில் தூக்கமின்றி
தனிமையில் கண்ணீர் சிந்தி
கணப் பொழுதில் உன்னை கலங்கப்படுத்தி
உன் எதிர்காலத்தை வீணடித்துவிடாதே

உன்னை அரவணைத்த பெற்றோருடன்
எல்லை கடந்து முரண்பட்டு
அன்பு காட்டிய சகோதரைத்தை
பிரிந்து சென்று
பல துன்பங்களை அனுபவித்துவிடாதே

காதலியை கனவு கண்டு
உன் அழகிய வாழ்க்கையை தொலைக்காதே
பிரிவின் வேதனை தாங்க முடியாமல்
மதுவுக்கு அடிமை ஆகிவிடாதே

உன் இனிய உறவுகளால் வெறுக்கப்பட்டு
சமூகத்தால் விரட்டப்பட்டு
நினைவுகளில் இருந்து விடுபடாமல்
உன் உயிரை இழந்துவிடாதே. . . . . .

Monday, June 21, 2010

என் வாழ்க்கையை வழி மறித்த நீ......


உலகம் உருண்டை என்பது
எல்லோரும் அறிந்த உண்மை
இந்த உலகில் நீ மட்டும் அழகி என்பது
நான் மட்டும் அறிந்த உண்மை

உனக்காக பல வேதனைகளை சுமந்து
உன் சந்தோசத்துக்காக என்
பல கவலைகளை மறைத்தேன்
என் வலி கொண்ட இதயத்தில்
இனிமையான சுவாசக் காற்று நீ

என் உயிர் நீ தான் என்று
நீ அறியாமல் பிரிந்து சென்றாய்
உன்னோடு வாழ்ந்த காலம், கடந்த காலம்
ஆனாலும் உந்தன் நினைவுகளால்
வாடித் தவிக்கிறேன்

அன்று வானில் பல நட்சத்திரம் தோன்றி மறைந்தாலும்
என் வாழ்வில் ஒரே ஒரு சூரியனாக
நீ மட்டும் பிரகாசித்தாய்

என் நிம்மதியான வாழ்வை மறித்து
வழியை திசை மாற்றினாய்
நீ விலகிய நாள் தொடக்கம் இன்றுவரை
வாழ்வை வெறுத்து, நிம்மதியை தொலைத்து
அலைந்து கொண்டிருக்கிறேன்......

Wednesday, June 16, 2010

என் இதயத்தில் உனக்காக......


உன் நினைவுகளில் கனவு கண்ட
என் விழிகளுக்கு
இன்னும் இரவுகளில் தூங்கவில்லை
தினமும் உன்னை மட்டும் நினைக்கும்
இந்த இதயத்திற்கு
இடைவெளி ஏதும் இல்ல

உன்னை புரிந்து கொண்ட எனக்கு
உன் பிரிவை தாங்க முடியவில்லை
காத்திருந்து பழகியவள் நீ
என்றும் நான் உன்னக்காக காத்திருப்பேன்

உன் நினைவுகளை சுமக்கின்ற என் இதயம்
உனக்கு சொல்ல நினைத்த வார்த்தைகள்
உன்னை கண்டவுடன்
உதடுகள் மௌனமாகியது
நாடித் துடிப்பு உள்ளவரை
தொடரும் உன் நினைவுகள்

உன்னை காண துடிக்கும் கண்ணும்
உன்னுடன் பேச எண்ணும் உதடுக்கும்
தினம் தினம் ஏமாற்றங்கள்
உன்னை நினைத்து நான் படும் வேதனைகள்
வார்த்தைகளில் அடங்காதவை
வலிகள் சொல்லிப்புரியாதவை

என்னை புரிந்து கொண்டு நீ
உன் காதலை என்னிடம் சொல்வாய்
என்ற நம்பிக்கையில்
உன் நினைவுகளை சுவாசித்து
உனக்காக உயிர் வாழ்கிறேன்!!!