Friday, July 16, 2010

மனம் வெறுக்கவில்லை. . . .


நான் இது வரை உணரவில்லை
உன் உண்மை காதல் எதுவென்று
உன்னோடு பழகிய ஒவ்வொரு நொடியிலும்
உணர்த்தினாய் உன் உயிர் மேலான
என் காதலை!!!

என் நினைவுகளை குறைத்து
உன்னை, உன் நினைவுகளையே ரசித்தேன்
நீ தொலைபேசியில் பேசிய வேளையில்
தொலைந்து போனது எனது ஜீவன்.....
உன் மௌனத்தால்
என் உள்ளத்தையே ஊமையாக்கினாய்

என் மனதை புரிந்து கொண்ட உனக்கு
என் இதயம் எப்பொழுதும் துடித்துக்கொண்டிருப்பது உனக்காக தான்
இதை மட்டும் நீ ஏன் இப்போழுது புரிந்து கொள்ள மறுக்கிறாய்
உன்னால் நான் படும் துன்பங்கள் கொஞ்சமல்ல
என்றாலும் மனம் வெறுக்கவில்லை

உன்னால், நான் உயிர் இருந்தும்
உணர்வற்று அலைகிறேன்
என் அன்பே, உயிர் கொடுப்பாயா
இல்லை உயிரை பிரிப்பாயா ? ? ? ?

என் உயிர் நண்பனே காதலித்து விடாதே . . . . . .


நண்பா நீ காதலில் கால் பதித்து
கண்ணீரை சொந்தமாக்கிவிடாதே
உன் பசுமைகளை தீக்கிரையாக்கி
இன்பங்களை தொலைத்துவிடாதே

மாயங்களில் மயங்கி
இரவுகளில் தூக்கமின்றி
தனிமையில் கண்ணீர் சிந்தி
கணப் பொழுதில் உன்னை கலங்கப்படுத்தி
உன் எதிர்காலத்தை வீணடித்துவிடாதே

உன்னை அரவணைத்த பெற்றோருடன்
எல்லை கடந்து முரண்பட்டு
அன்பு காட்டிய சகோதரைத்தை
பிரிந்து சென்று
பல துன்பங்களை அனுபவித்துவிடாதே

காதலியை கனவு கண்டு
உன் அழகிய வாழ்க்கையை தொலைக்காதே
பிரிவின் வேதனை தாங்க முடியாமல்
மதுவுக்கு அடிமை ஆகிவிடாதே

உன் இனிய உறவுகளால் வெறுக்கப்பட்டு
சமூகத்தால் விரட்டப்பட்டு
நினைவுகளில் இருந்து விடுபடாமல்
உன் உயிரை இழந்துவிடாதே. . . . . .

Monday, June 21, 2010

என் வாழ்க்கையை வழி மறித்த நீ......


உலகம் உருண்டை என்பது
எல்லோரும் அறிந்த உண்மை
இந்த உலகில் நீ மட்டும் அழகி என்பது
நான் மட்டும் அறிந்த உண்மை

உனக்காக பல வேதனைகளை சுமந்து
உன் சந்தோசத்துக்காக என்
பல கவலைகளை மறைத்தேன்
என் வலி கொண்ட இதயத்தில்
இனிமையான சுவாசக் காற்று நீ

என் உயிர் நீ தான் என்று
நீ அறியாமல் பிரிந்து சென்றாய்
உன்னோடு வாழ்ந்த காலம், கடந்த காலம்
ஆனாலும் உந்தன் நினைவுகளால்
வாடித் தவிக்கிறேன்

அன்று வானில் பல நட்சத்திரம் தோன்றி மறைந்தாலும்
என் வாழ்வில் ஒரே ஒரு சூரியனாக
நீ மட்டும் பிரகாசித்தாய்

என் நிம்மதியான வாழ்வை மறித்து
வழியை திசை மாற்றினாய்
நீ விலகிய நாள் தொடக்கம் இன்றுவரை
வாழ்வை வெறுத்து, நிம்மதியை தொலைத்து
அலைந்து கொண்டிருக்கிறேன்......

Wednesday, June 16, 2010

என் இதயத்தில் உனக்காக......


உன் நினைவுகளில் கனவு கண்ட
என் விழிகளுக்கு
இன்னும் இரவுகளில் தூங்கவில்லை
தினமும் உன்னை மட்டும் நினைக்கும்
இந்த இதயத்திற்கு
இடைவெளி ஏதும் இல்ல

உன்னை புரிந்து கொண்ட எனக்கு
உன் பிரிவை தாங்க முடியவில்லை
காத்திருந்து பழகியவள் நீ
என்றும் நான் உன்னக்காக காத்திருப்பேன்

உன் நினைவுகளை சுமக்கின்ற என் இதயம்
உனக்கு சொல்ல நினைத்த வார்த்தைகள்
உன்னை கண்டவுடன்
உதடுகள் மௌனமாகியது
நாடித் துடிப்பு உள்ளவரை
தொடரும் உன் நினைவுகள்

உன்னை காண துடிக்கும் கண்ணும்
உன்னுடன் பேச எண்ணும் உதடுக்கும்
தினம் தினம் ஏமாற்றங்கள்
உன்னை நினைத்து நான் படும் வேதனைகள்
வார்த்தைகளில் அடங்காதவை
வலிகள் சொல்லிப்புரியாதவை

என்னை புரிந்து கொண்டு நீ
உன் காதலை என்னிடம் சொல்வாய்
என்ற நம்பிக்கையில்
உன் நினைவுகளை சுவாசித்து
உனக்காக உயிர் வாழ்கிறேன்!!!

Thursday, May 20, 2010

தந்தை, தாய்......


பத்து மாதங்களாக பாசத்துடன் சுமந்தாய்
உன் குருதியை பாலாக ஊட்டினாய்
உண்ணுவதற்கு உணவு கொடுத்த நீ
நிம்மதி உறக்கமும் தந்தாய்

பல அறிவுரை கற்று கொடுத்து
சமூகத்தில் நல்ல மனிதன் ஆக்கினாய்
பல வெற்றிகளை பாராட்டிய நீ
தோல்விகளுக்கு தோள் கொடுத்தாய்

தப்பு பண்ணியத்துக்கு தண்டித்தாய்
தலை சாய்க்க தலையணை தந்தாய்
என் ஆற்றல்கள் வளர்க்க உதவி,
சமூகம் என்னை போற்றுவதை கண்டு மகிழ்ந்தாய்

நான் கேட்பதை கொடுக்கும் கடவுள் நீ
நீ காட்டிய பாதைகள் பல கடந்து
சிகரங்கள் தொட்டேன்
உங்களது நல்லாசியுடன்
வாழ்க்கை பயணதில் வழி தவறாமல்
இனிதே பயணித்து கொண்டிருக்கிறேன்.....

நீ, நான், .....


நீ சுவாசிக்கும் பொழுதுகளில்
நான் உயிர் வாழ்கிறேன்
நீ போகும் இடமெங்கும்
நான் காத்திருந்து பேசினேன்

உன்னை சந்திக்கின்ற அதிசயமான
பொழுதுகளில் எல்லாம் உந்தன் இதழ் பேசியது
உனக்காக உனக்கு பிடித்த பலவற்றை
தயங்காமல் செய்தேன்
பிரிந்து செல் என்று சொல்ல மனதின்றி
வலிகள் பிடிக்கும் என்றாய்

வசந்தங்கள் நிறைந்த வாழ்வில் இருக்கும் போது
என் அருகில் இருந்தாய்
பல சந்தோசங்களை என்னுடன் கழித்து
பிரிவு என்னும் வலியை விட்டு சென்றாய்

உன் எதிர்காலத்தை கனவு கண்டு
என் நிகழ்காலத்தை வீணடித்தாய்
இரவுகளில் உறக்கம் இன்றி தவிக்கிறேன்
உன்னுடன் பேச துடிக்கிறேன்
விடை பெற்றது நீ என்றாலும்
வலி பெறுவது நான் தானே!!!

Friday, May 14, 2010

என்றும் மறவாத பள்ளி நாட்கள்


பதின்மூன்று ஆண்டுகளாக பள்ளியிலே
மாணவன் என்ற சமூகத்தில்
பல வருட படிப்புகளுக்கு
சில மணிநேர சோதனைகள்

நாட்கள் செல்லச் செல்ல
அறிவுகள் வளர்கின்றன
பல நாடகங்கள் அரங்கேற்றி
காதல் தோல்விகளை சந்தித்தோம்

மாணவ தலைவன் என்ற தரத்துக்கு உயர்த்தப்பட்டு
பல மன்றங்கள் ஆரம்பித்தோம்
விஞ்ஞான மன்றம் நிறுவி
நவீன உலகில் நன்மைகள் பெற்றோம்
கலை மன்றம் தொடங்கி
கலைஞர்களை அடையளாம் கண்டோம்

பட்டங்கள் பெறுவதற்கு
சில குறும்புகள் செய்து சிகரம் தொட்டோம்
பாடங்கள் குதிரை விட்டு
உதைபந்தாட்டம் விளையாடி
உப அதிபரிடம் உதை வாங்கியது
இன்றும் சுகமாக வலிக்கிறது

அன்று பல மாணவர்களுடன் பழகி
சில நண்பர்களாக சேர்ந்தோம்
இன்று பிரிந்து வெகு தூரம் சென்றாலும்
சிநேகிதர்களாக இருக்கிறோம்

பல ஆசிரியர்களால் தண்டிக்கப்பட்டு
சில ஆசிரியர்களிடம் பாராட்டு பெற்றோம்
அன்றைய மகிழ்ச்சிகள் இனி எங்களுக்கு
திரும்பிக் கிடைக்கப்போவது இல்லை!

சோதனைகள் சந்தித்து வேதனைகள் தாங்கினோம்
இறுதிப் பரீட்சையின் இறுதி முடிவுடன்
விடை பெற்றோம்!!!