
கனவுகளை மனதில் நிறைத்து
காதல் உணர்வை வளர்த்தவளே
அத்தனையும் நிஜமாவதிற்குள்
நினைவுகளை மட்டும்
உன் நிழல்களுடன் விட்டு
நீ எங்கு சென்றாய்
உன் நிழலில் குளிர் காயும் எனக்கு
இவ் உலகில் நிம்மதி இல்லை
உனக்காக விடைபெற்ற சொந்தங்களிடம்
சொல்லி அழ மனசில்லை
உன்னையே நேசித்துக் கொண்டிருக்கும்
என் இதயத்தில்
உன்னை தவிர யாருக்கும்
இவ் உலகில் இடமில்லை
உன்னை பார்க்க துடிக்கும்
கண்களுக்கு கண்ணீரைத் தவிர
யாரும் இல்லை ஆறுதலுக்கு
தூங்க தயங்கும் விழிகளுக்கு
துணை கூட உன் நினைவுகள் தான்
No comments:
Post a Comment