Tuesday, April 19, 2011

அன்பே காதலிப்பது பாவமா


அன்பே காதலிப்பது பாவமா
உன்னை கனவு கண்டு
வாழ்க்கையை தொலைத்தேன்
என் வாலிப வயதினிலே

என் மனச் சாலையில்
நித்தம் நித்தம் பல கேள்விகள்
அத்தனையும் உன் மெளனத்திற்க்கு முன்னால்
ஊமை யாகின்றன
என் நினைவுப் பறவை
உன் சுவாசக் காற்றில் பறக்கின்றது தினமும்

இன்று கவனிப்பாரற்ற மனம்
சிந்துகின்றது கண்ணீரை
ஆரும் அறியாத் தனிமையில்
துடிக்கின்றது என் இதயம்

உறங்காத என் ஏக்கங்களும்
புரிந்து கொள்ள முடியாத வலிகளோடு
நாளைய விடியலில் உன் வருகையை
எதிர்பாத்து காத்திருகிறேன்

No comments:

Post a Comment