
அன்பே காதலிப்பது பாவமா
உன்னை கனவு கண்டு
வாழ்க்கையை தொலைத்தேன்
என் வாலிப வயதினிலே
என் மனச் சாலையில்
நித்தம் நித்தம் பல கேள்விகள்
அத்தனையும் உன் மெளனத்திற்க்கு முன்னால்
ஊமை யாகின்றன
என் நினைவுப் பறவை
உன் சுவாசக் காற்றில் பறக்கின்றது தினமும்
இன்று கவனிப்பாரற்ற மனம்
சிந்துகின்றது கண்ணீரை
ஆரும் அறியாத் தனிமையில்
துடிக்கின்றது என் இதயம்
உறங்காத என் ஏக்கங்களும்
புரிந்து கொள்ள முடியாத வலிகளோடு
நாளைய விடியலில் உன் வருகையை
எதிர்பாத்து காத்திருகிறேன்
No comments:
Post a Comment