Thursday, April 21, 2011

என்னவளே


நேசித்த இதயத்திற்கு
பாசம் அதிகம் என்றார்கள்
ஆனால் உன்னால் அறிந்து கொண்டேன்
காதலித்த இதயத்திற்கு
வலிகளும் அதிகம் என்று

நான் உறவுகள் அற்று
தனிமையில் துடித்த போது
சொல்லாமல் வந்த உறவு நீ
முகவரி இல்லாத என் வாழ்க்கைக்கு
முழு நிலவாய் வந்தவளே
இன்று நான் காதல் பைத்தியத்தில்
கண்ணீரோடு அலைகின்றேன்

உன்னை நேசித்த பாவத்திற்கு
விடை கூறாமல் சென்றவளே
விடை பெறும் நேரத்திலும்
நினைவுகளை மட்டும் தந்தவளே

இன்று உன் கழுத்தில் தாலி என்னும்
பாசக்கயிரை கட்டி
கணவன் என்னும் நாடகம் போடுபவனை
பார்த்து எரிகின்றது என் இதயம்

உன் வாழ்வின் எல்லை வரை
சந்தோசங்கள் மட்டுமே நடை போட
வாழ்த்துகின்றது என் உள்ளம்

No comments:

Post a Comment