Wednesday, April 6, 2011

செய்த குற்றங்கள்


என் விழிகள் செய்த குற்றத்தால்

உன்னை ஆயுள் கைதியாய்

மனச் சிறையில் அடைத்தேன்

என் இதயம் செய்த குற்றத்தால்

நீ என்னிடம் மௌன மொழி பேசியது

நம் இரு உயிர் செய்த குற்றத்தால்

வசந்தங்கள் நிறைந்த வாழ்வை

கனவுகளில் தொலைத்தது

நம் காதல் செய்த குற்றத்தால்

இருவரும் தனிமையில் தவிர்ப்பது

உன் நினைவு செய்த குற்றத்தால்

பிரிந்து சென்ற உனக்கு

இன்றுவரை கவிதை எழுதிக் கொண்டிருப்பது

No comments:

Post a Comment