
என் விழிகள் செய்த குற்றத்தால்
உன்னை ஆயுள் கைதியாய்
மனச் சிறையில் அடைத்தேன்
என் இதயம் செய்த குற்றத்தால்
நீ என்னிடம் மௌன மொழி பேசியது
நம் இரு உயிர் செய்த குற்றத்தால்
வசந்தங்கள் நிறைந்த வாழ்வை
கனவுகளில் தொலைத்தது
நம் காதல் செய்த குற்றத்தால்
இருவரும் தனிமையில் தவிர்ப்பது
உன் நினைவு செய்த குற்றத்தால்
பிரிந்து சென்ற உனக்கு
இன்றுவரை கவிதை எழுதிக் கொண்டிருப்பது
No comments:
Post a Comment