
கண்முன் தோன்றியவள் நீயே
கனவுகளை தந்தவளும் நீயே
காதலை சொன்னது காதலியாய் வந்தவள் நீயே
என் இதயத்தை திருடியவள் நீயே
உணர்வுகளை தந்தவளும் நீயே
அழகான நாட்களை தந்தவள் நீயே
அவஸ்தையை தந்தவளும் நீயே
என்மீது இரக்கப்பட்டவள் நீயே
என்னை பிரிந்து சென்றவளும் நீயே
எனக்கு முகவரியாய் வந்தவள் நீயே
என் இதயத்தில் முள்ளாய் குத்தியவளும் நீயே
முழு நிலவாய் வந்தவள் நீயே
என் தூக்கத்தை கெடுத்தவளும் நீயே
நினைவுகளை தந்தவள் நீயே
நீங்காத வலிகளை தந்தவளும் நீயே
No comments:
Post a Comment