
அன்பே......! என் ஆருயிரே......
ஆசையில் ஓர் கடிதம்
கனவிலும் காதலை நினைத்ததில்லை
உன்னைக் காணும் வரை
இனிமேலும் நான் நேசிக்கப்போவதில்லை
உன்னை விட வேறு ஒருவரையும்
கற்பனையிலும் என் கைகள்
கிறுக்குகின்றது உன் பெயரை
நிஜத்திலும் என் கால்கள்
பின் தொடர்கின்றன உன் கால் தடத்தை
உன்னோடு பேசுகின்ற தருணத்தில்
என்னையே தொலைத்து விடுகின்றேன் உன்னிடத்தில்
உன்னை பார்க்கின்ற பொழுதுகளில்
உலகையே மறந்துவிடுகிறேன்
உன் விருப்பு வெறுப்புக்களை
நீ சொல்லாமல் புரிந்து கொண்டேன்
அதை என்னுமா உன் மனம் அறியவில்லை கண்னே
வாழ்க்கையின் சந்தோசமும்
நம் காதலின் வெற்றியும்
உன் வருகையில் தானடி
என் மனதில் பல ஏக்கங்களுடன்
உனக்காக காத்திருக்கும்
உன் அன்பின் காதலன் (என் ஜீவன்)
No comments:
Post a Comment