
இயற்கையை இனிதே ரசித்து
பசுமையான பாதையில்
இன்பமான வாழ்கையை
பயணித்த வேளை
காதல் என்னும் விபத்தில்
சிக்கினேன் உன்னிடத்தில்
உன்னருகே இருத்த வேளை
வாழ்க்கையை நினைத்ததில்லை
வலிகள் உணர்ந்ததில்லை
கடவுளை கூட வணங்கியதில்லை
விதியின் விளையாட்டால்
வலிகளுடன் காதலை
என்னிடத்தில் விட்டு
விடைபெற்றுச் சென்றாய்
இன்று சோகத்துடன் மீட்கின்றேன்
அன்றைய நாட்களை
கண்ணீரோடு அலைகின்றேன்
இருவரும் சேர்ந்து இருந்த இடங்களில்
அன்பே ஜீவன் பிரியும் வரை
நம் பிரிவுகள் நிரந்தரமில்லை
உன் நினைவுகளை மறக்கும் வரை
நம் காதல் அழிவதில்லை
காலங்கள் பல ஆனாலும்
என் இதய தேசத்தில்
என்றும் உன்க்காக இடமிருக்கும்
அங்கு உன் வரவை எதிர் பாத்து காத்திருபேன்
No comments:
Post a Comment