Thursday, April 21, 2011

என் காதல் . . . . .


உன்னைக் கண்ட வேளை
என் இதயம் துடிப்பதை
நான் உணர்ந்து கொண்டேன்
நீ பேசிய வார்த்தையில்
முழுதாய் இழந்து விட்டேன்
என் வாழ்க்கையை

உன் அழகை ரசித்து
உனக்காக செதுக்கிய
காதல் மாளிகையை
கண் முன்னே நொருக்கிவிட்டாய்

வலிகள் தெரியாத என் வாழ்வில்
வச்ந்தமாய் வந்து
அழியாத சோகம் கொடுத்தாய்

வார்த்தைகளால் கொள்ளாதே
என் உயிரே !
நிஜமாய் வலிக்கின்றது
நீ விலகி விலகிப் போனாலும்
உன் மனதிலிருக்கும்
உண்மை மறையாதல்லவா

அன்பே முகம் பார்த்து
பழகிய எனக்கு
முடிவு தெரியாமல் காத்திருப்பது
வேதனையல்லவா
இது தானா கடவுளின் சோதனை

உன்னை மட்டுமே உலகம்
என எண்ணிய எனக்கு
இப்போது கல்லறை
மட்டும் தான் தஞ்சம்

No comments:

Post a Comment