Saturday, April 30, 2011

உயிர் கொடுப்பாயா. . . . . . ?


எங்கிருந்தோ வந்தாய்
எனக்கு சில நாள் சந்தோசம் தந்து
வாழ் நாள் முழுக்க சோகம் தந்தாய்
பல அதிர்வுகளை தாங்கியும்
புண் படாத இதயத்தை
சில நொடிகளில் சிதறடித்தாய்

என்மீது பாசத்தைக் காட்டி
என் மனதை திருடியவளே
குளிர் இரவிலும்
அணு அணுவாய் சுடுகின்றது
நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்
என் இதயம் சிந்துகின்றது
உதிரத் துளிகளை கண்ணீராய்

நிலவுகளில் உன் நினைவுகளும்
நிறைவேறா கனவுகளும்
என் நிம்மதியை நித்தமும்
கலைக்கின்றன

கல்மனம் கொண்டவளே
தடம் மாறாத நம் காதலுக்கு
நீ மனம்மாறி வாருவாயா
என் ஜீவனுக்கு உயிர் கொடுப்பாயா

No comments:

Post a Comment