
அன்பே இன்று என்னருகே நீ இல்லை
உன் இதயத்திலும் நான் இல்லை
என் இதயத்தில் நீ இருந்தும்
என்னிடத்தில் எதையும் நீ பகிர்ந்ததில்லை
அன்று உன்னைப்போல் எவருக்கும்
என் மீது இரக்கம் இல்லை அன்பே,
இருந்தும் இன்று நீ எதையும் புரியப்போவதில்லை
இதை நான் அறிந்தும்
உன்னை என்றும் வெறுக்கப்போவதில்லை
என் இதயம் வலி தாங்கினாலும்
உன் நினைவுகளை மறக்கப்போவதில்லை
அன்பே,என்னை நீ பிரிந்து சென்றாலும்
உன் நினைவுகள் என் இதயத்தை விட்டுச் செல்வதில்லை
நம் அழகான காதலில்
அழியாத சோகம் தந்தவள் நீ
அதை அறிந்தும் உன்னையே
நேசித்திதுக் கொண்டிருப்பவன் நான்
நீ பேசமாட்டாய் என்று தெரிந்தும்
உன்னோடு பேசுவதற்காக
தினம் தினமும் துடித்துக்கொண்டிருப்பவன் நான்
மௌனமாய் நீ சென்றாலும்
காலம் எல்லாம் காத்திருப்பவன் நான்
அன்பே, கனவெது நினைவெது புரியாது
விடியாத இரவுகளோடும்
முடிவில்லா உன் நினைவுகளோடும்
விடை பொறாமல் தவிக்கின்றேன்