Sunday, November 20, 2011

ஏமாற்றம்


காலம் கடந்த பின்னும்

கண்ணுக்குள் உன் காதல் மட்டும்

கடல் கடந்த தூரத்தில் இருத்தும்

நெஞ்சுக்குள் உன் நேசம் மட்டும்

எனக்கு சொந்தமாவதில்லை என அறிந்தும்

கனவில் நீ பேசிய வார்த்தைகள் மட்டும்

உனக்காக துடிக்கும் இதயத்தின் நினைவில்

உன் புன்னகை பூத்த முகம் மட்டும்

இணைவோம் என காத்திருக்கும் எனக்கு

தினமும் ஏமாற்றம் மட்டுமே . . . . . .

Tuesday, November 1, 2011

உன் தவிப்பு


யாருமற்ற இந்த நிலாவொளியில்
உன் நினைவுகளையே
அள்ளித்தரும் தருணம்
நான் தனிமையில் தவிக்க
துணைக்கு ஆறுதல் சொல்ல
தொலைபேசியில் கசியும்
உன் குரல் ....

இந்த இரவினில்
ஏக்கங்கள் அதிகரித்தாலும்
பனிக் குளிரில்
உடல் நடுங்கினாலும்
எனக்கு தனிமை புலப்படவில்லை
நீ நெஞ்சிலே வாழ்வதனால்....

தோழியாய் நீ
எங்கும் கூடவரும் போது
எனக்கு தெரியவில்லை
உன் நேசம்
காதலியாய் நீ
தொலைவினில் காத்திருக்க
என் மனசே தாங்கவில்லை
உன் தவிப்பை கண்டு....

என் விருப்பம் . . .


உன்னைக் காணும் வரை
காதல் ஆசை இல்லை
என் மனதில்
உன்னை சந்தித்த பின்
என் இதயமோ என்னிடம் இல்லை ....

அன்பால் உள்ளத்தை இணைத்து
பாசத்தால் உணர்வுகளை பகிர்ந்து
கனவுகளில் ஆசை வளர்த்து
எண்ணங்களை கவிதையாக்கி
காதல் மழையாய் பொழிந்து
விலகிச் சென்றாய்
என்னிடமிருந்து ....

மனதை பறிகொடுத்த
முதல் சந்திப்பில்
நீ இசைத்த இதயராகம்
இன்றும் என் மனவாசலில்
ஒலித்துக் கொண்டிருகிறது....

என் உயிரே
உன்னிடத்தில் நம் காதல்
உதிராது இருக்கும் வரை
வாழப் போகும் சில நாட்களுக்காக
ஏழு ஜென்மம் வேண்டுமானாலும் காத்திருபேன்
இல்லையேல்
நீ பேசிய காதல் மொழியோடு
காற்றுடன் சங்கமிப்பேன் . . . .

காதலின் ஏக்கம் . . . . . .


என்னவளே !!!
இந்த அப்பாவி மனதில்
அமைதியாய் குடிகொண்டாய்..
கற்பாறையாய் இருந்த என் இதயத்தில்
காதல் ரோஜாவாய் மலர்ந்தாய்..
என் இரவுகளை களவாடி
உறக்கத்திலும் தொந்தரவு செய்தாய்..
மௌன மொழி போசி
உன் வெறுப்பை வெளிக்காட்டினாய்..
என்றும் உனக்காக நான் மட்டும் தான் என
தினமும் உன் நினைவாலே ஏங்க வைத்தாய்..
என் உயிரில் கலந்தவளே
ஆயுள் முழுவது உனக்காக வாழ்ந்தாலும்
அதில் ஒருநாள் உன்னோடு வாழ்ந்தால்
போதும் கண்ணே..

Sunday, October 9, 2011

உனக்காகவே...


நித்தமும் உன் நினைவுகளையே
சுமக்கின்ற என் நெஞ்சு,
உன் வரவினை எதிர்பார்த்து
எத்தனை கனவுகள்...

உன் மனதை புரிந்ததனால்
உன் குறும்புகளை ரசிக்கும்
ரசிகனானேன்
உன் நினைவுகளோடு இருப்பதனால்
உன்னை காக்கும்
காவலனானேன்

கனவுகளில் நீவந்து
ஆசைகளை தூண்டிவிட்டாய்
கற்பனைகளிலே
சிற கடித்து பறக்கிறேன்

மலரே
உன் மனதில் இருப்பதை
மௌனத்தால் மறைத்தும்
என் அசைவுகள் அனைத்தும்
உன்னை நாடியே...
நான் உயிரோடு வாழ்வது
உனக்காகவே...

வேதனை


உன் காதல் தந்த சோதனையால்
என் நினைவுகள் அனைத்தும்
உன்னைப் பற்றியே. . . .
உள்ளுக்குள் அழுகிறேன்
நீ படரச் செய்த பாசத்தால். . . .
வெளியிலே சிரிக்கின்றேன்
என்னை வெறுக்கும் உறவுகளை நினைத்து

என் உணர்வுகளை புரிந்த நண்பர்களும்
என்னருகே இல்லை
என் உயிரோடு கலந்த நீயும்
என்னிடத்தில் இல்லை

உன்னுடன் பழகிய நாட்கள்
உன் நினைவுகளோடு
வாழ்ந்த காலம்
இவை அனைத்தையும்
கனவென மறக்க நினைக்கிறேன்
மறுகனமே வேண்டாம் என்கிறது
என் உண்மை காதல்......

காயங்கள் . . . .


உன்னை மறக்க நினைக்கின்றேன்
மனதில் அமைதியில்லை. . . .
உன்னை வெறுக்க முயல்கின்றேன்
வாழ்வில் நிம்மதியில்லை. . . .
உன் நினைவுகளை அழிக்கத் துடிக்கிறேன்
இரவுகளில் தூக்கமில்லை. . . .
வெளியிலே சிரித்து நடித்தாலும்
உள் காயங்கள் ஆறவில்லை. . . .
விடியல்களில் ஏக்கங்களுடன் காத்திருந்து
ஏமாற்றத்துடன் விடைபெறுகின்றன. . . .

அன்று சந்தோஷமாய் இருந்த சில நொடியை விட
இன்று சுமையாய் இருக்கும் உன் நினைவுகள்
என்றுமே சுகமானவை . . . .

காதலியே


என்னுயிர் வான்மதியே. . .
உன் இளமை தீண்டியதால்
நான் சிக்கித் தவிக்கின்றேன்...

என்னைக் கேளாமலே
என் இதயச் சுவர் எங்கும்
உன் நினைவுகளை
நிரப்பிவிட்டாய்
என் செல்லமே

அன்று
தென்றலாய் வந்தாய்
என்மனதை கொள்ளையடிக்க
தேனாக சுவைத்தாய்
இதயத்தில் சிறைவைக்க

இன்று
தொலை பேசி அடித்தாலும்
நீ தான்
ஈமையில் பார்த்தாலும்
உன் வரிகள்- என்று
என் மனம் அலைமோதுகின்றது

என் உயிர் செல்லமே ,
எண்ணங்களை கவிதையாக்கி
உன்னிடத்தில் சமர்பிக்கின்றேன்
நீ என்மீது கொண்ட காதல்
உண்மையானால்
என்னிடம் வருவாயா ????

Wednesday, September 28, 2011

நிரந்தரமா ......


நிலவே
என் இதயம் துளிர்த்தது
உன் பணிவான பாசத்தால்
என் மனம் குளிர்ந்தது
உன் உதடு பூத்த புன்னகையால்
என் விழி மயங்கியது
நீ துணையாக வருவதினால்
என் உயிர் நனைந்தது
நீ கொடுத்த முத்தத்தால்
நான் மெய் மறந்தது
நீ அரவணைத்த அன்பால்.....
இவை அணைத்தும்
என் உயிர் உள்ளவரை நிரந்தரமா. . .

கனவானது காதல் ......


தினம் நான் காணும் கனவுகள்
அத்தனையும் உன்னை நினைத்து
ஒரு துளி கூட எண்ணவில்லை
என் கனவுகள்
வெகு விரைவில் நீ அறிவாய் என்று
இருண்ட என் உலகத்தில்
ஒளி வீசிய அதிசயமாய்
நம் இருவரினது
முதல் சந்திப்பு
மனதில் பல கற்பனைகளோடு
கையில் ஒரு ரோஜாவோடு
காத்திருந்த எனக்கு,
கண் எதிரே தோன்றினாய்
அழகிய தேவதையாக ....
உன்னை கண்டு
சிறகடித்து பறந்த என் மனதை
நீ பேசிய அந்த ஒரு கணத்திலே
சிதறடித்து சென்றாய்
முதல் சந்திப்பிலே
முடிவுற்ற நம் உறவு
மீண்டும் கனவானது காதல் ……

Monday, August 22, 2011

நான் அறிந்த உண்மை


என்ன வாழ்க்கையோ !
பயணங்கள் தான்
ஆரம்பித்துவிட்டனவே..
மனது மட்டுமே அறிந்த
உண்மை , பல
வேதனைக்கும் நடுவில்
வெளியில் போடுவது
புன்னகை வேஷம் என்று.

மானிட வாழ்க்கையில்
எல்லாம் கிடைத்தோர்
யார் யாரோ?
அதனால் நிம்மதி
இழந்தவர் யார் யாரோ?

புரிந்த இந்த
வாழ்க்கை பயணத்தில்..
சந்தித்த பல சொந்தங்களில்
பெற்றுக் கொண்டேன்
அதில் ஒரு உறவை.
அறிந்து கொண்டேன்
பாசத்தின் ஆழத்தை.

மனசாட்சி அறிந்தாலும்
மற்றவர்களுக்கு புரியவில்லை
வெளியல் நான் போடும்
வேஷத்தில், என்னை
நானே ஏமாற்றுகிறேன் என்று ......

உண்மைக் காதல் . . . .


முடிவு தெரியாத
நம் காதல் பயணத்தில்
மௌனம் சாதிக்கும்
உன் பெண்மை
விலக நினைத்தாலும்
விடைபெற முடியாத
உன் நினைவுகள்
பிரிய நினைத்தாலும்
மீண்டும் பார்க்கத் தூண்டும்
உன் புன்னகை பூத்த முகம்
சண்டை பிடித்தாலும்
சரணடையச் செய்யும்
உன் அன்பு
கண் கலங்கினாலும்
ஆறுதல் சொல்லும்
உன் பாசம்
அன்பே இது தானா
நம் உண்மைக் காதல் ......

நெஞ்சே ...!


விரும்பி கிடைத்த
உன் உறவை,
வெகு விரைவில்
பிரிந்தது என் ஜீவன்..

பொழுதுபோக்காய் நேசித்த
உனக்காக,
உதிர்ந்து போன
என் வாழ்க்கை..

கல் நெஞ்சம் படைத்த
உனக்காக,
கடைசி வரை உன்னையே
சுற்றி வந்த பாதங்கள்..

உன்னை காதலித்த
பாவதிற்காய்,
கண்ணீர் சிந்துகிற
என் இதயம்..

இன்று அநாதையானாளும்
இனிமையா இருக்கிறது,
உன் நினைவுகள்
கடைசிவரை
என் கூடவே இருப்பதால்..

Sunday, August 21, 2011

உன் உறவு . . .


என் மனதை கொள்ளையிட்டவளே
என் வாழ்க்கையின்
அர்த்தத்தை உணர்த்தியவளே

உன்னால் என் மனதில்
ஆசை காட்டி வளர்த்த
இந்த புதிய உறவு ...
என்மீது நீ வைத்த
ஆழமான அன்பு
என்னுள் காதல் பயிரை
வளர்த்துவிட்டதடி..!

உன்னை பார்த்த
என் கண்களின் சந்தோஷம்...
நீ என்னுடன் பேசிய
அந்த சில நொடிகள்...
என் உயிரினில்
ஆழமாய் பதிந்ததடி..!

கனவில் மலரும்
என் காதல் நினைவுகள் கூட
நிஜமானது உன்னால்...
உறக்கத்தை பறி கொடுத்து
உறவுகள் சிதறடித்து
மலர்ந்த இந்த உண்மை காதலால்..!

பிறந்தேன் மறுபடியும்
உன்னிடத்தில்
காதல் ஏக்கங்களோடு...
என் வாழ்வில்
இத்தனை சுகங்களும்
உன்னால் தானடி...!

இவையெல்லாம் தந்த
உன் இனிய உறவு
எனக்கு உயிரல்லவா...
உன் உறவை பிரியும் தருணத்தில்
என் உயிரும் பிரியும் அவ்விடத்தில்...

வாழ்க்கை . . . . . .


முகத்தில் புன்னகை பூத்தாலும்
உள் மனதில் அழுகிறேன்
தினம் தினமும்...
தேவாதி தேவனே
எனக்கு மட்டும் ஏன்
பல சோதனைகள்
வாழ்நாள் முழுவது...

என் சின்னச் சின்ன
சந்தோஷத்திற்க்கு கூட
கனவுகள் பலித்ததில்லை...
என் மன ஆறுதலுக்காவது
ஒரு சிறு வெற்றி கூட
இதுவரை கிடைத்ததில்லை...

காலங்கள் சென்றாலும்
வலிகள் சிறிதும் குறையவில்லை...
காயங்கள் எதுவும்
மாறவில்லை ...
கடவுளே இன்னும்
ஏன் இந்த வாழ்க்கை ?

மறக்க முடியுமா


பெண்ணே
இதயங்களுக்குள் அன்பு பரிமாறி
பாசத்தால் பின்னிப் பிணைந்து
வாழ்கையில் ஆசைகள் வளர்த்த
நம் காதல்
இன்று காணல் நீராய் போனதடி

அன்பே
நாம் காதலில் இனிமையாக
வாழ்ந்த காலம் சில காலம் ஆனாலும்
அவை எல்லாம் வெறும் கனவுகள் என்று
மறக்க முடியுமா

என்னவளே
நீ என்னை பிரிந்தாலும்
பூவை விட மென்மையான உன்னை
என் ஆயுள் காலத்தில்
மறக்க முடியுமா

இதயமானவளே
என் வாழ்வில் சோகம் நிறைந்தாலும்
நித்தமும் நினைவூட்டும்
உன் நினைவுகளை
மறக்க முடியுமா

என் உயிரானவளே
இவற்றை மறக்கும் என்னம்
என் ஜீவனுக்கு இல்லை
அப்படி மறந்தால்
என் ஜீவன் இவ்வுலகில் இல்லை

Monday, July 11, 2011

உன்னை ஒரு போதும் வெறுக்க மாட்டேன் . . . . . .


தெரியாத போது

ஆசைப்பட்டு அணைத்த என்னை

தெரிந்த போது

தெருவில் உதறி விட்டாய்

உறவாக நீ பேசிய வார்த்தைகளில்

உலகமே நீதான் என்று

மனம் மகிழ்ந்தேன் அன்று

என் உயிரே என்னை

உதறிய போது

உணர்வுகளை ஊமையாக்கி

மரணித்துக் கொண்டிருக்கிறேன் இன்று

நீ பேசிய வார்த்தைகளை

கவிதைகளாக சுவாசித்து

நீ எழுதிய கடிதத்தை

என் கல்வெட்டாக படித்துப் பார்க்கிறேன்

மனதிற்க்கு வலி தந்தாலும்

என் இனிய உறவாக இதயத்தில்

நினைத்துக் கொண்டிருக்கின்ற உன்னை

ஒரு போதும் வெறுக்க முயர்ச்சிக்க மாட்டேன்

என் உயிர் காதலியே . . . . . .


நீ எனக்கு சொந்தமில்லாதவள் என்று
என் மனம் அறிந்தும்
உனக்காகவே என் இதயம் துடிக்கிறது
அன்பே உன்னை மறக்க நினைத்தால்
மரணிக்க துணிகிறது என் மனம்
நீ என் கனவு தேவதையாக
காலம் முழுவது என் இதயத்தில் இருந்தாலும்
நான் தான் உன் காதலன்
என்று மீண்டும் கேட்க
எனக்கு நம்பிக்கையில்லை
நீ இதை புரிந்து கொண்டாலும்
திரும்பி வர உனக்கு தைரியம் இல்லை
அன்பே எந்த தவறும் செய்யாமல்
அணு அணுவாய் தண்டனை
அனுபவிக்கின்ற பாவியாய் நான்

தனிமையில் தவம் இருந்தும்
என் மனம் உன் நினைவுகளில் இருந்து
விடுபடவில்லை
அன்பே காலங்கள் பல கடந்து
நான் கல்லறை சென்றாலும்
என் உயிர் காதலி நீ தான்

புரியவில்லையா உனக்கு


உன் நினைவுகளை நினைக்கும் போது
கனவுகளில் விழுந்து போகின்றேன்
நீ என் அருகில் இல்லாத போது
என் வாழ்வில் நிம்மதியை இழந்துவிடுகின்றேன்
உன்னை எண்ணித் துடிக்கும்
என் மனத்திற்க்கோ
விலகிக் கொள்ளத் தெரியவில்லை

உன்னை புரிந்து கொண்டாலும்
என்னை பிரிந்து சென்ற
உன்னை மட்டுமே உலகம் என
வேதனை கொண்டு வாழும்
என் ஜீவன்
தூக்கத்திற்க்கு சென்றாலும்
தூங்காமல் தவிர்க்கிறன்து
உன்னை நினைத்து

நினைக்காத பொழுதுகளிலும்
நிலையாக என் இதயத்தில்
நிறைவாக வீ ற்றிருக்கும்
உன் நினைவுகளை தான்
நீ என் மனச் சிறையில்
இருந்த தருணத்திலும்
புரிந்து கொள்ளவில்லையா

நானும் ஒரு அநாதை


எழுத படிக்கத் தெரியாத வயதினில்
தெருவோர வாழ்கையும்
சிந்திக்க தெரியாத வயதினில்
சந்தித்த சோதனைகளும்
கிழிந்த இலையில்
எச்சில் உணவும்
கரம் கொடுக்க யாருமின்றி
தள்ளாடும் கால்களும்
பெற்றவர்களை தெரியாமல்
சகோதர பாசம் அறியாமல்
பசி வயிற்றை கிள்ள
சிந்துகின்ற கண்ணீரும்
ஆயிரம் தடவை அழைத்தாலும்
அணைதுக் கொள்ள யாருமின்றி
தூங்கிய பொழுதுகளும்
சந்தோஷமே தெரியாமல்
காலங்கள் பல கடந்து
வலிகளும் தொடர்கின்ற வேளை
புரிந்து கொண்டேன் இன்று
நானும் ஒரு அநாதையென்று . . . . . .

என் அன்புள்ள ராட்ஷசி


என்னவளே அன்று தேவதையாய் வந்து
என் இதயத்தை பறித்து சென்றாய்
இன்று தெருவோரம்
தனிமையில் துடிக்கும் போது
ஒன்றும் தெரியாத ராட்ஷசியாய்
ஒதுங்கி செல்கிறாய்

நீ என்முன் ராட்ஷசியாய் நடித்தாலும்
நிஜத்தில் என்மீது உண்மையான
அன்பு செலுயத்தியவள்
உன் உள் மனதை புரிந்துகொண்ட எனக்கு
என்றுமே என் உயிர்த்
தேவதை நீயடி

சின்ன சின்ன காரணங்கள் சொல்லி
என்னுடன் செல்லச் சண்டையிட்டு
தொலைதூரம் சென்று
எனக்காக காத்திருக்கும்
என் அன்புள்ள ராட்ஷசியை
உயிர் உள்ளவரை மறக்கமாட்டேன்

அன்பே சொல்


நீ பெண்ணாக பிறந்தாய்
என் இதயத்தை களவாடவா
பூவாக மலர்தாய்
என் வாழ்வை வசந்தமாக்கவா
உறவாக இணைத்து கொண்டாய்
துன்பங்களை பகிர்ந்துகொள்ளவா
வார்த்தைகளால் கவி பாடினாய்
என் வாலிபத்தில் காதல் கொள்ளவா
தென்றலாய் வருடிச் சென்றாய்
என் உணர்வுகளை புரிந்து கொள்ளவா
சொல் அன்பே சொல் . . . . . .

Sunday, June 19, 2011

நீ இல்லையே



சந்தித்த உள்ளத்தில்
என் இதயத்தை தொலைத்து விட்டு
மனதில் பல ஏக்கங்களோடு
என் கனவிலும் கலையாத
உன் திருமுகத்தை காண
தினம் தினம் தவிக்கிறேன்

பூக்கின்ற பூக்கள் எல்லாம்
வாடாமல் இருப்பதில்லை
வாடுகின்ற மலர்கள் எல்லாம்
உதிராமல் இருப்பதில்லை
என்னவளே உன்னால் என்
மன பூங்காவில் மலர்ந்த
காதல் பூ என்றுமே உதிராதடி

உனக்கான என் தேடல்
ஒரு காணல் நீரென்று தெரிந்தும்
உன்னையும், உன் நினைவுகளையும்
இன்னும் நேசிக்கின்றேன்

ஒன்று சேர்க்க
முடியாத நம் ஜீவன்களால்
நிம்மதி இல்லாத
என் வாழ்க்கை
தொடர்கின்ற சோகங்களை
சொல்லி அழ என்னருகே
நீ இல்லையே என்னவளே

சம்மதம் தருவாயா


அன்பே, உயிரோடு கலந்த
உன்னை மறக்க
என் மனதிற்க்கு தெரியவில்லை
குழப்பங்கள் என் மனதில் இருந்தாலும்
உனக்கு எந்த வலியையும் தரவில்லை
என் உள்ளத்தில் சோகம் நிறைந்தும்
உன் சந்தோஷத்தை கலைக்கவுமில்லை
இதை அத்தனையும் நீ உணர்ந்திருப்பாய்

உன் சம்மதம் ஒன்றுக்காக
நான் படும் வேதனைகளை
யாரிடம் சொல்ல
தனிமையில் வாடிய
என் மீது அளவற்ற பாசத்தை காட்டி
ஏன் விலகி சொல்லுகிறாய்

நிரந்தரமில்லாத உறவுகளுக்காய்
உண்மையான நம் காதலை
என் புறக்கணிக்கிறாய்
என் உயிரே
நான் மறு ஜென்மமும்
உன்னோடு வாழ்வதோ
இல்லை மறுகணமே
மரணிப்பதோ
உன் பதிளில் தானடி. . . . . .

சுகமான நினைவுகள்


உன்னுடனான நினைவுகள் தான்
எவ்வளவு சுகமானது
உன் கை பிடித்து
கடற் கரையில் நடந்த நாட்களும்
உன் மடி சாய்ந்து தூங்கிய
ரயில் பயணங்களும்
பொன் மாலை பொழுதுகளில்
நீ, என் தோள் சரிந்து
பாடிய பாடல்களும்
நாம் மெய் மறந்து மணிக்கணக்கில்
பேசிக் கொண்ட நிலாக் காலங்களும்
இடி மின்னலுக்கு நீ என்னை இறுக
கட்டியனைத்த மழை நேரங்களும்
இரவுகளில் தூங்காமல்
இருவரும் இடை விடாது பரிமாறிய
குறுஞ் செய்திகளும்
நான் தாமதித்து வந்தால்
நீ என்னோடு புரியும்
செல்லச் சண்டைகள்
இவை அனைத்து
நம் பிரிவிலும்
சுகமான நினைவுகளாக
என்றுமே கலங்காமல் இருப்பவை

புரியாத மனசு . . . . . .


என் மனக்குளத்தில்

காதல் கல் வீசி

மனதை கலங்க வைத்தவளே

அறியாமல் செய்த காதலில்

அழியாத சோகம் தந்து

மறைந்து சென்றவளே

ஏனடி இவ்வளவு

நீண்ட இடைவெளி ......

உன்னை கனவிலும்

கண் கலங்கவிடாத

என் ஜீவனை

கொல்லாமல் கொல்கிறாய்

உனக்கு ஏதடி பாசம்......

என்னைப் பல இதயங்கள் நேசித்தாலும்

என் உயிர் தேடும் உறவு

நீ மட்டும் தனே என்னவளே

அதை நீ ஏன் அறியாத

வேஷம் போடுகிறாய்......

அன்பே , என் மரணத்திலாவது

நம் காதல் உயிர் வாழுமானால்

நீ மனம் தடுமாறாது

என்னை கொன்றுவிடு

நம் காதல் ஆவது

நிம்மதியா வாழட்டும்......

தனிமையில் ஒரு தவிப்பு


உன் பார்வையால்
என் இதய தேசத்தில் இடம் பிடித்தவளே
உன்னுடன் கழியும்
ஓவ்வொரு நொடியிலும்
உன்னோடு ஜோடி சேர்ந்து
வானில் பறக்கின்றேன்

கனவிழும் கற்பனை வளர்த்து
இரவுகளில் தூக்கத்தை தொலைத்து
நிலவுகளில் உன் படத்துடன் கதை பேசி
நினைவுகளை கவிதையாக்கி
நிமிடங்களில் என்னை மறக்கிறேன்
உன்னைப் பார்த்த முதல் நொடியில் இருந்து
இருக்கும் காலம் முழுவதும்
உனக்காக வாழ்கிறேன்

பிரியமே ,
புரியாத உன் இதயத்திற்கு
அழியாத நம் காதலை
அணையாமல் எரிக்கின்றாய்
நெருப்பாலும் அழிக்க முடியாத
உன் நினைவுகளோடு
அழகிய நந்தவனத்தில்
அநாதையான பறவையா நான்
இன்று தனிமையில் தவிக்கிறேன்

நேசிப்பேன்


சுவாசிக்கும் வரை காற்றை நேசிப்பேன்

தூங்கும் வரை நிலவை நேசிப்பேன்

கற்பனை உள்ளவரை கவிதையை நேசிப்பேன்

கரையைத் தொடும் வரை கடல் அலையை நேசிப்பேன்

விண்மீன் மறையும் வரை வானை நேசிப்பேன்

பூக்கள் வாடும் வரை நந்தவனத்தை நேசிப்பேன்

பாசம் உள்ளவரை உறவுகளை நேசிப்பேன்

நினைவுகள் உள்ளவரை நண்பர்களை நேசிப்பேன்

கல்லறை செல்லும் வரை காதலை நேசிப்பேன்

உயிர் உள்ளவரை நட்பை நேசிப்பேன்

Saturday, April 30, 2011

மறந்து விடாதே . . . . . . !!


பாசம் என்னும் போதைக்கு
பலியாகிய நம் இதயங்களை
சிதறடித்தாய் இன்று,
சிந்துகின்ற கண்ணீரில் கழுவிப்பாக்கின்றேன்
காதலித்த தருணங்களை

அர்த்தம் இல்லாத என் வாழ்க்கையில்
வழி தவறிய வேளை
வழி காட்டியாய் வந்தவளே
உன் திரு முகத்தை பார்த்த வேளை
முழுதாய் சரண் அடைந்த்தேன் உன்னிடத்தில்

தூங்காத இரவுகளில் இணைந்த இதயங்களை
நினைத்து நித்தம் நித்தம் பல கனவுகள்
உன்னை காதலித்த போது
கரை ஒதுக்கிய நண்பனையும்
காயப்படுத்திய பெற்றோரையும்
இன்றுவரை நினைத்ததில்லை

உன்னை தேடும்வரை
உடல் வாடுவதில்லை
உன்னோடு பேசும் வரை
என் உள்ளம் சோர்வதில்லை
என்னை கண்டவுடன்
உன் புன்னகைக்கு நிகர்
ஏதும் இல்லை எனக்கு

என் இதயத் தோட்டத்தில் மலர்ந்த
காதல் ரோஜாவே
இதமான பொழுதுகளில்
உன்னோடு இன்பமான பயணங்களும்
எல்லையில்லா சந்தோசங்களும்

கல் முள் நிறைந்த பாதைகளில்
கண்ணீர் சிந்தாத நம் இதயங்கள்
கொட்டும் மழையினிலும் இணை பிரியா ஜீவன்கள்
இன்று துணைக்கு யாரும் இன்றி
தனிமையில் துடிக்கின்றது

என் உயிரே
நம் அழியாத காதலுக்கு
முடியாத சோகம்தனை
கல்லறை வரை சுமக்கின்ற
இந்த உயிருள்ள காதலனை மறந்து விடாதே. . . .

உயிர் கொடுப்பாயா. . . . . . ?


எங்கிருந்தோ வந்தாய்
எனக்கு சில நாள் சந்தோசம் தந்து
வாழ் நாள் முழுக்க சோகம் தந்தாய்
பல அதிர்வுகளை தாங்கியும்
புண் படாத இதயத்தை
சில நொடிகளில் சிதறடித்தாய்

என்மீது பாசத்தைக் காட்டி
என் மனதை திருடியவளே
குளிர் இரவிலும்
அணு அணுவாய் சுடுகின்றது
நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்
என் இதயம் சிந்துகின்றது
உதிரத் துளிகளை கண்ணீராய்

நிலவுகளில் உன் நினைவுகளும்
நிறைவேறா கனவுகளும்
என் நிம்மதியை நித்தமும்
கலைக்கின்றன

கல்மனம் கொண்டவளே
தடம் மாறாத நம் காதலுக்கு
நீ மனம்மாறி வாருவாயா
என் ஜீவனுக்கு உயிர் கொடுப்பாயா

காதல் கடிதம்


அன்பே......! என் ஆருயிரே......
ஆசையில் ஓர் கடிதம்
கனவிலும் காதலை நினைத்ததில்லை
உன்னைக் காணும் வரை
இனிமேலும் நான் நேசிக்கப்போவதில்லை
உன்னை விட வேறு ஒருவரையும்
கற்பனையிலும் என் கைகள்
கிறுக்குகின்றது உன் பெயரை
நிஜத்திலும் என் கால்கள்
பின் தொடர்கின்றன உன் கால் தடத்தை
உன்னோடு பேசுகின்ற தருணத்தில்
என்னையே தொலைத்து விடுகின்றேன் உன்னிடத்தில்
உன்னை பார்க்கின்ற பொழுதுகளில்
உலகையே மறந்துவிடுகிறேன்
உன் விருப்பு வெறுப்புக்களை
நீ சொல்லாமல் புரிந்து கொண்டேன்
அதை என்னுமா உன் மனம் அறியவில்லை கண்னே
வாழ்க்கையின் சந்தோசமும்
நம் காதலின் வெற்றியும்
உன் வருகையில் தானடி
என் மனதில் பல ஏக்கங்களுடன்
உனக்காக காத்திருக்கும்
உன் அன்பின் காதலன் (என் ஜீவன்)

காதலின் ஆரம்பமா...... அன்பின் இறுதியா......


பனித்துளி விழுந்து பாறை நடுங்குமா
மழைத்துளி விழுந்து பாலைவனம் பசுமையாகுமா
மின்னல் விழுந்து விண்மீன் சேதமாகுமா
தென்றல் வீசி மலைகள் நகருமா
ஆனால் அன்பே
உன் பார்வையில் நான் விழுந்தேன்
உன் சிரிப்பில் நான் மிதந்தேன்
உன் அழகில் நான் மயங்கினேன்
உன் அன்பில் நான் அடிபணிந்தேன்
உன் பாசத்தில் என் இதயத்தை இழந்தேன்
இது என் காதலின் ஆரம்பமா
அன்பின் இறுதியா

Thursday, April 21, 2011

என் காதல் . . . . .


உன்னைக் கண்ட வேளை
என் இதயம் துடிப்பதை
நான் உணர்ந்து கொண்டேன்
நீ பேசிய வார்த்தையில்
முழுதாய் இழந்து விட்டேன்
என் வாழ்க்கையை

உன் அழகை ரசித்து
உனக்காக செதுக்கிய
காதல் மாளிகையை
கண் முன்னே நொருக்கிவிட்டாய்

வலிகள் தெரியாத என் வாழ்வில்
வச்ந்தமாய் வந்து
அழியாத சோகம் கொடுத்தாய்

வார்த்தைகளால் கொள்ளாதே
என் உயிரே !
நிஜமாய் வலிக்கின்றது
நீ விலகி விலகிப் போனாலும்
உன் மனதிலிருக்கும்
உண்மை மறையாதல்லவா

அன்பே முகம் பார்த்து
பழகிய எனக்கு
முடிவு தெரியாமல் காத்திருப்பது
வேதனையல்லவா
இது தானா கடவுளின் சோதனை

உன்னை மட்டுமே உலகம்
என எண்ணிய எனக்கு
இப்போது கல்லறை
மட்டும் தான் தஞ்சம்

என்னவளே


நேசித்த இதயத்திற்கு
பாசம் அதிகம் என்றார்கள்
ஆனால் உன்னால் அறிந்து கொண்டேன்
காதலித்த இதயத்திற்கு
வலிகளும் அதிகம் என்று

நான் உறவுகள் அற்று
தனிமையில் துடித்த போது
சொல்லாமல் வந்த உறவு நீ
முகவரி இல்லாத என் வாழ்க்கைக்கு
முழு நிலவாய் வந்தவளே
இன்று நான் காதல் பைத்தியத்தில்
கண்ணீரோடு அலைகின்றேன்

உன்னை நேசித்த பாவத்திற்கு
விடை கூறாமல் சென்றவளே
விடை பெறும் நேரத்திலும்
நினைவுகளை மட்டும் தந்தவளே

இன்று உன் கழுத்தில் தாலி என்னும்
பாசக்கயிரை கட்டி
கணவன் என்னும் நாடகம் போடுபவனை
பார்த்து எரிகின்றது என் இதயம்

உன் வாழ்வின் எல்லை வரை
சந்தோசங்கள் மட்டுமே நடை போட
வாழ்த்துகின்றது என் உள்ளம்

இதயமானவளே


கவிதை எழுத கற்பனை தந்தாய்
சுவாசிப்பதற்கு உன் நினைவு தந்தாய்
சிறகு இல்லாமல் பறப்பதற்கு கனவு தந்தாய்
உணர்வுகளை பரிமாற இதயம் தந்தாய்
காதலிப்தற்கு அன்பு தந்தாய்
காதல் உயிர் வாழ புன்னகை தந்தாய்
நான் கல்லறை செல்ல பிரிவு என்னும் வலி தந்தாய்

Tuesday, April 19, 2011

அன்பே காதலிப்பது பாவமா


அன்பே காதலிப்பது பாவமா
உன்னை கனவு கண்டு
வாழ்க்கையை தொலைத்தேன்
என் வாலிப வயதினிலே

என் மனச் சாலையில்
நித்தம் நித்தம் பல கேள்விகள்
அத்தனையும் உன் மெளனத்திற்க்கு முன்னால்
ஊமை யாகின்றன
என் நினைவுப் பறவை
உன் சுவாசக் காற்றில் பறக்கின்றது தினமும்

இன்று கவனிப்பாரற்ற மனம்
சிந்துகின்றது கண்ணீரை
ஆரும் அறியாத் தனிமையில்
துடிக்கின்றது என் இதயம்

உறங்காத என் ஏக்கங்களும்
புரிந்து கொள்ள முடியாத வலிகளோடு
நாளைய விடியலில் உன் வருகையை
எதிர்பாத்து காத்திருகிறேன்

நீயே


கண்முன் தோன்றியவள் நீயே

கனவுகளை தந்தவளும் நீயே

காதலை சொன்னது காதலியாய் வந்தவள் நீயே

என் இதயத்தை திருடியவள் நீயே

உணர்வுகளை தந்தவளும் நீயே

அழகான நாட்களை தந்தவள் நீயே

அவஸ்தையை தந்தவளும் நீயே

என்மீது இரக்கப்பட்டவள் நீயே

என்னை பிரிந்து சென்றவளும் நீயே

எனக்கு முகவரியாய் வந்தவள் நீயே

என் இதயத்தில் முள்ளாய் குத்தியவளும் நீயே

முழு நிலவாய் வந்தவள் நீயே

என் தூக்கத்தை கெடுத்தவளும் நீயே

நினைவுகளை தந்தவள் நீயே

நீங்காத வலிகளை தந்தவளும் நீயே

உண்மை காதல் புரியும்


சுவாசிக்கும் போது தான் தென்றல் தெரியும்
இரவு வரும் போது தான் நிலா தெரியும்
பூ வாடும் போது தான் மணத்தின் அருமை தெரியும்
வேலை தேடும் போது தான் படிப்பின் திறமை தெரியும்
கடின உழைப்பின் போது தான் வாழ்வின் சுகம் தெரியும்
ஆபத்து வரும் போது தான் நட்பின் ஆழம் தெரியும்
உனக்காக உயிர் பிரியும் போது தான்
என் உண்மை காதல் புரியும்

Monday, April 11, 2011

உனக்காக காத்திருகின்றேன் . . . . . .


இயற்கையை இனிதே ரசித்து
பசுமையான பாதையில்
இன்பமான வாழ்கையை
பயணித்த வேளை
காதல் என்னும் விபத்தில்
சிக்கினேன் உன்னிடத்தில்

உன்னருகே இருத்த வேளை
வாழ்க்கையை நினைத்ததில்லை
வலிகள் உணர்ந்ததில்லை
கடவுளை கூட வணங்கியதில்லை

விதியின் விளையாட்டால்
வலிகளுடன் காதலை
என்னிடத்தில் விட்டு
விடைபெற்றுச் சென்றாய்

இன்று சோகத்துடன் மீட்கின்றேன்
அன்றைய நாட்களை
கண்ணீரோடு அலைகின்றேன்
இருவரும் சேர்ந்து இருந்த இடங்களில்

அன்பே ஜீவன் பிரியும் வரை
நம் பிரிவுகள் நிரந்தரமில்லை
உன் நினைவுகளை மறக்கும் வரை
நம் காதல் அழிவதில்லை
காலங்கள் பல ஆனாலும்
என் இதய தேசத்தில்
என்றும் உன்க்காக இடமிருக்கும்
அங்கு உன் வரவை எதிர் பாத்து காத்திருபேன்

மெளனம் வேண்டாம். . .


உன்னை நேசித்து
உனக்காக காத்திருக்கும்
என் இதயத்தை நினைத்தாவது
என்னோடு ஒரு வார்த்தை பேசு

உன்னை நினைத்து
என்னுள்ளத்தில் கனவு காணும்
என் மனதை நினைத்தாவது
என்னோடு ஒரு வார்த்தை பேசு

உன் பெயரை உச்சரித்து
உனக்கு பல கவிதை எழுதி
உணர்வற்ற என் கைகளை நினைத்தாவது
என்னோடு ஒரு வார்த்தை பேசு

உன்னோடு வாழ்ந்து
உனக்காக சாக துணியும்
என் உயிரை நினைத்தாவது
என்னோடு ஒரு வார்த்தை பேசு

பெண்ணே , மரணம் கூட ஒரு தடவை தான்
ஆனால் உன் மெளனம் நித்தம் நித்தம்
என்னை கொல்லாமல் கொல்கின்றதே
இனியும் மெளனம் வேண்டாம். . . .
அன்பே உன் திருவாய் மலர்ந்து
என்னோடு ஒரு வார்த்தை பேசு

உன்னை நினைத்தேன்


உன்னை துணையாக நினைத்தேன்

என்னை தனிமையில் விட்டாய்

உன்னை என் உயிராக நினைத்தேன்

என் கண்கள் கண்ணீரில் வசீகரிக்கிறது

உன் நினைவுகளை நினைத்தேன்

என் இதயம் வலிக்கின்றது

உன்னை மறக்க நினைத்தேன்

உன் நினைவுகள் தடுக்கின்றன

உன்னை வெறுக்க நினைத்தேன்

என் இதயம் மறுக்கிறது

உனக்காக சாக நினைத்தேன்

நம் காதல் காப்பாற்றுகின்றது

புரிகின்றதா உனக்கு

என் உயிரே நீ தான் செல்லமே

Wednesday, April 6, 2011

செய்த குற்றங்கள்


என் விழிகள் செய்த குற்றத்தால்

உன்னை ஆயுள் கைதியாய்

மனச் சிறையில் அடைத்தேன்

என் இதயம் செய்த குற்றத்தால்

நீ என்னிடம் மௌன மொழி பேசியது

நம் இரு உயிர் செய்த குற்றத்தால்

வசந்தங்கள் நிறைந்த வாழ்வை

கனவுகளில் தொலைத்தது

நம் காதல் செய்த குற்றத்தால்

இருவரும் தனிமையில் தவிர்ப்பது

உன் நினைவு செய்த குற்றத்தால்

பிரிந்து சென்ற உனக்கு

இன்றுவரை கவிதை எழுதிக் கொண்டிருப்பது

கனவிலும் உன்னோடு தான். . . . . .


கனவுகளை மனதில் நிறைத்து
காதல் உணர்வை வளர்த்தவளே
அத்தனையும் நிஜமாவதிற்குள்
நினைவுகளை மட்டும்
உன் நிழல்களுடன் விட்டு
நீ எங்கு சென்றாய்

உன் நிழலில் குளிர் காயும் எனக்கு
இவ் உலகில் நிம்மதி இல்லை
உனக்காக விடைபெற்ற சொந்தங்களிடம்
சொல்லி அழ மனசில்லை
உன்னையே நேசித்துக் கொண்டிருக்கும்
என் இதயத்தில்
உன்னை தவிர யாருக்கும்
இவ் உலகில் இடமில்லை
உன்னை பார்க்க துடிக்கும்
கண்களுக்கு கண்ணீரைத் தவிர
யாரும் இல்லை ஆறுதலுக்கு
தூங்க தயங்கும் விழிகளுக்கு
துணை கூட உன் நினைவுகள் தான்

Monday, April 4, 2011

நீ விட்டு சென்ற காதல்


என் இனிய தென்றலே
நான் அடிமை ஆகியது
உன் அன்புக்காக தானே
அதனால் தான்
என் இதயம் இன்று வரை
உன்னை நேசித்துக் கொண்டிருக்கிறது

விழிகளில் கண்ணீர் வடிந்தாலும்
உன் நினைவுகள்
இன்னும் பத்திரமாய்
உன்னுள்ளே இருக்கிறது
நீ என்னுடன் பேசிய
சில நிமிடங்களும்
பழகிய காலங்களும்
என் வாழ்வின் பொக்கிஷமாய்

அன்பே உன் புண்ணகை பூத்த முகமும்
நீ என்னோடு போட்ட செல்லச் சண்டைகளும்
இன்று என் மனதுக்குள்
அலை மோதுகிறது
நான் திரும்பும் இடமெங்கும்
உன் காலடித் தடங்களும்
நான் சுவாசிக்கும் காற்று முழுக்க
உன் நினைவுகளும்
தினம் தினம் என்னை வருடிச் செல்கின்றன

உன்னால் வாழ்க்கையின் அர்த்தத்தையும்
பாசத்தின் ஆழத்தையும்
புரிந்து கொண்ட எனக்கு
பிரிவின் வலியை மட்டும்
தாங்க முடியவில்லையே
இவற்றை மறக்கும் சக்தி
என் மனதுக்கு இல்லையே

இப்படி எல்லாம் நடப்பது
என் விதியா
இது அப்போதே தெரிந்திருந்தால்
உன்னை பிரிந்து மகிழிச்சியுடன் சென்றிருப்பேன்
உவ்வுலகை விட்டு. . . . . .

Monday, March 28, 2011

இதயத்தின் வலிகள் . . . . . .


அன்பே இன்று என்னருகே நீ இல்லை
உன் இதயத்திலும் நான் இல்லை
என் இதயத்தில் நீ இருந்தும்
என்னிடத்தில் எதையும் நீ பகிர்ந்ததில்லை

அன்று உன்னைப்போல் எவருக்கும்
என் மீது இரக்கம் இல்லை அன்பே,
இருந்தும் இன்று நீ எதையும் புரியப்போவதில்லை
இதை நான் அறிந்தும்
உன்னை என்றும் வெறுக்கப்போவதில்லை

என் இதயம் வலி தாங்கினாலும்
உன் நினைவுகளை மறக்கப்போவதில்லை
அன்பே,என்னை நீ பிரிந்து சென்றாலும்
உன் நினைவுகள் என் இதயத்தை விட்டுச் செல்வதில்லை

நம் அழகான காதலில்
அழியாத சோகம் தந்தவள் நீ
அதை அறிந்தும் உன்னையே
நேசித்திதுக் கொண்டிருப்பவன் நான்

நீ பேசமாட்டாய் என்று தெரிந்தும்
உன்னோடு பேசுவதற்காக
தினம் தினமும் துடித்துக்கொண்டிருப்பவன் நான்
மௌனமாய் நீ சென்றாலும்
காலம் எல்லாம் காத்திருப்பவன் நான்

அன்பே, கனவெது நினைவெது புரியாது
விடியாத இரவுகளோடும்
முடிவில்லா உன் நினைவுகளோடும்
விடை பொறாமல் தவிக்கின்றேன்

மறக்க முடியாத உன் பிரிவு. . . . . .


கடல் கரைகளில் உன் கைகோர்த்து நடந்த
பொன்மாலை பொழுதுகள்
உன் மடி சாய்ந்து உறங்க ஏங்கிய
அந்த குளிர் இரவு
இருவரும் ஒரு குடையில் சென்ற
மழைக் காலங்கள்
உன்னுடன் மட்டுமே சேர்ந்து சென்ற
தொலை தூர பயணங்கள்
நீ தொலைபேசியில் பேசிய
அந்த சில நிமிடங்கள்
இரவுகளில் உன்னையே நினைத்து
தூங்காது விழித்திருந்த என் விழிகள்
நிலவுகளில் நீ எனக்காக
எழுதிய கவிதைகள்
உனக்காக காயப்படுத்திய
என் உறவுகள்
உனக்காக என்றும் வேண்டி
நித்தம் தொழுத என் உள்ளம்
உனக்குள் தொலைக்கப்பட்ட
என் உயிர்
இவை எல்லாத்தையும்
ரணப்படுத்திணாய் அன்பே
பிரிவு என்னும் ஒரு சொல்லில். . . .


இன்று இதயம் என்னும் கல்லறையில் வசந்தமான உன் நினைவுகள்
மட்டுமே என் வலிகளுக்கு ஆறுதலாய்......

Tuesday, March 22, 2011

அன்பே உன் பதில் வேண்டும்


என்னை காக்க வைத்த நீ

தனிமையில் அங்கு

உனக்காக காத்திருந்த நான்

தவிர்ப்புக்களில் இங்கு

உன்னையே எண்ணிய எனக்கு

சுற்றி நிகழும் நிஜங்கள் கூட நிழலாய்

உதடு பிரியாத புன்னகையிலும்

ஆடம்பரமில்லா வெட்கத்திலும்

உன் அன்புக்கு அடிமையாகி

எனது இதய நதியில் ஓடமாய்

ஓடிக் கொண்டே இருக்கும் உன் நினைவுகளை

கவிதைகளாக உனக்கு எழுதினேன்

உன் இதயத்தில் எனக்கோர் இடம் கேட்டு

அன்பே, காதலை நேசிக்கும் உன்னிடம்

பகிர்ந்துள்ளேன் என் உணர்வுகளை

பதிலை தந்திடு . . . . . .

Wednesday, March 16, 2011

என்றும் உன் நினைவில் . . . . . .


அன்பே உனக்காக வாழ நினைத்த போதெல்லாம்
உதாசீனப்படுத்தி பைத்தியம் என்றாய்
இன்று உன்னை பிரிந்து உன் நினைவோடு
வாழும் போது பாவம் என்கிறாய்

உதட்டில் நீ மறைத்தாலும்
உன் மனதில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நீ என்னை வெறுத்தாலும்
என் இதயம் இயக்கும் வரை
உன்னை காதலித்துக் கொண்டிருப்பேன்

உன்னை நேசித்த இதயத்தை
இலகுவாக பிரித்த உனக்கு
இதயத்தின் வலியை மட்டும் எப்படி உணர்வாய்

உன்னுள் என் நினைவுகளாவது
நிம்மதியாய் உறங்கட்டும் என்று
தூங்காத இரவுகளோடு
துணைக்கு நீ இன்றி
ஏங்கித்தவிக்கிறேன் . . . .

என் நண்பா ......


எங்கிருந்தோ வந்தேன்...
நட்பு என்னும் பாலத்தால்
நண்பன் என்னும் உன் உறவை பெற்றேன்

ஆழமாய் துளிர்விட்டு
அழகாய் பூத்தது நம் நட்பு
அந்த நட்பு என்னும் நந்தவனத்தில்
நெடுங்காலம் இணைத்திருந்தோம்

வாழ்க்கை என்னும் பயணத்தில்
துன்பமாய் உன்னை பிரிந்து
மொழி தெரியாத ஊரில் வாழ்ந்தாலும்
என் இதயம் என்னும் இயந்திரம் இயங்கும் வரை
உன் நட்பு என்னும் காற்றை சுவாசித்துக் கொண்டிருப்பேன்



என்றும் உன் தோழனாய் சேது . . . . .

எனக்குள்ளே உயிராய் வாழும் உன் காவியமே . . . . .


என் இதய பூந்தோட்டத்தில் மலர்ந்த ரோஜாவே
கடல் கரையில் உன்னுடன்
கெஞ்சி அழுத இரவுகளும்
பேசிய பழகிய நாட்களும்
இன்று என் மனசுக்குள் கண்ணீர் காவியமாய்

என் மீது அளவற்ற அன்பு காட்டி
வலிகளுக்கு கண் கலங்கினாய்
உனக்கு நிகர் யாரும் இல்லை எனக்கு,
என்று நீ அறிந்து அநாதையாய் விட்டு விலகினாய்

இன்று என் மனசுக்குள் நான் படும் வேதனைக்கு
உன்னை தவிர யாருக்கும் தெரிவதில்லை
என் விரல் பிடித்து நீ துடைத்த மணல்களும்
நீ எழுதிய கவிதைகளும்
என் கண் முன்னால்

நீ கடல் தாண்டி இருந்தாலும்
என் மனதில் தினமும் கலையாத கனவுகளில்
என் அருகில் இருந்த முழுநிலா தொலை தூரத்தில் சென்றாலும்
தனிமையில் உன் நினைவுகளுடன் உன் கால் தடத்தில்
தினமும் உன் வரவை எதிர் பார்த்து காத்திருகிறேன்